ஆப்நகரம்

நான் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை : ஜெ., மருமகன்

தான் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை என மறைத்த முன்னாள் முதல்வர் ஜெ.,யின் மருமகன் தீபக் கூறியுள்ளார்.

TNN 21 Dec 2016, 9:06 pm
சென்னை : தான் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை என மறைத்த முன்னாள் முதல்வர் ஜெ.,யின் மருமகன் தீபக் கூறியுள்ளார்.
Samayam Tamil am not control under anyone jayalalithas niece
நான் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை : ஜெ., மருமகன்


தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5-ம் தேதி உடல்நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் உயிரிழந்தார். ஜெ., சாவில் மரணம் இருப்பதாக சில அரசியல் தலைவர்களும் ,நெட்டிசங்களும் கூறிவந்தனர். தமிழக ஏதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் உட்பட சிலர் ஜெ., மரணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கூறியிருந்தனர்.

மேலும் ஜெ.,வின் அண்ணன் மகள் தீபா சசிகலா மீது மறைமுகமாக பல குற்றச்சாட்டுகளை கூறி வந்தார். ஆனால் மேலும் தீபாவின் தம்பியான தீபக் சசிகலாவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அதனால் தான் அவர் சசிகலாவுக்கு ஆதரவாக இருப்பதாகவும் நெட்டிசங்கள் கூறி வந்தனர். இந்தநிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அவர் பல்வேறு கேள்விகளுக்கு விடையளித்துள்ளார்.

அந்த பேட்டியில் அவர் கூறும் போது, " நான் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை. எனது குடும்பத்திற்கு ஜெ., வுடன் சசியும் உதவி செய்தார். அதிமுக கட்சி ராணுவ கட்டுப்பாடு கொண்ட கட்சி. அதனால் யார் கட்சியின் தலைவர் யார் என்பதை நிர்வாகிகளும், தொண்டர்களும் தான் முடிவு செய்ய வேண்டும்.
அவர்கள் முடிவு எடுத்து சசிகலாவை ஏற்றுக்கொண்டால் நான் மகிழ்ச்சி அடைவேன். தினசரி வாழ்க்கையில் அத்தையுடன் கடந்த 35 ஆண்டுகளாக சசிகலா இருந்துள்ளார். கட்சியினர் அனைவரையும் சசிகலாவுக்கு நன்றாக தெரியும். அதனால் அவர்களால் அதிமுகவை கண்டிப்பாக வழிநடத்த முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது " என்று தீபக் கூறினார்.

அடுத்த செய்தி