ஆப்நகரம்

அமராவதி அணையின் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

அமராவதி அணைப் பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக,அதம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 16 Jul 2018, 11:53 pm
அமராவதி அணைப் பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக,அதம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil அமராவதி அணையின் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!
அமராவதி அணையின் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!


தென்மேற்கு பருவமழை காரணமாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், கர்நாடகாவில் உள்ள எல்லா அணைகளும் அதன் முழுகொள்ளளவை எட்டி வருவதால், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

அமராவதி அணையின் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியில் உள்ள அமராவதி அணையில், தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால், நேற்று அமராவதி அணையின் நீர்மட்டம் 83.80 அடியாக உயர்ந்தது. இதையடுத்து, அமராவதி அணையிலிருந்து உபரி நீர் அமராவதி ஆற்றில் திறந்துவிடப்பட உள்ளதால், அதன் கரையோர பகுதிகளில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி