ஆப்நகரம்

சுனாமியை தடுக்கும் பனை மரத்தின் அருமையை இனியாவது அறிவோம்!

சென்னை: பனை மரத்தின் நன்மைகள் குறித்து விரிவாகக் காண்போம்.

Samayam Tamil 25 Nov 2018, 2:58 pm
’பனைக்கு பத்தடி’ என்ற முறையில் நம் முன்னோரால் வளர்க்கப்பட்ட மரம் தான் பனை மரம். இதற்கு ஆழிப் பேரலையைச் சமாளிக்கும் திறன் உள்ளது. எனவே தமிழக கரையோரங்களில் கோடிக்கணக்கான பனை மரங்களை நமது முன்னோர்கள் நட்டு வைத்து வளர்த்தனர்.
Samayam Tamil Palm Tree


ஆனால் சமீப காலமாக பல்வேறு காரணங்களைக் கூறி, பனை மரங்களை வெட்டி எறிந்து விட்டனர். தற்போது தேடிப் பார்த்தாலும் பனை மரத்தைக் காண முடியாத நிலை தான் இருக்கிறது.

இதன் விளைவு தமிழகக் கரையோர மாவட்டங்கள் இயற்கை சீற்றங்களைச் சமாளிக்க முடியாமல் தவிக்கின்றன. சிறிய புயலுக்கு கரையோரப் பகுதிகள் பலத்த சேதத்தைக் கண்டு விடுகின்றன.

தமிழகத்தில் கள் எடுக்க தடைச் சட்டம் அமலில் உள்ளது. இதன் பின்னணியில், கள் விற்பனை பெருகினால் மது விற்பனை குறைந்து விடும் என்ற அரசியல் உள்ளது. இதனால் பனை மரங்கள் வெட்டப்படுவதை தமிழக அரசும் கண்டு கொள்வதில்லை.

புயல், சுனாமியை தடுத்து நிறுத்தி, கரையோரப் பகுதிகளுக்கு அரணாக பனை மரங்கள் விளங்கக் கூடியவை. தமிழகத்தைத் தாக்கிய தானே புயல் முதல் கஜா புயல் வரை ஏராளமான மரங்கள் தூக்கி வீசப்பட்டுள்ளன.

ஆனால் பனை மரத்தை மட்டும் வீழ்த்த முடியவில்லை. எத்தகைய இயற்கை சீற்றங்களிலும் நிமிர்ந்து நிற்கும் பனை மரத்தின் அருமையை இனியாவது உணர்வோம்.

அடுத்த செய்தி