ஆப்நகரம்

ஏனாத்தூர் அருகே பேருந்து மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து.! நோயாளி உட்பட 2 பேர் பலி.!

நோயாளியை ஏற்றி சென்ற 108 ஆம்புலன்ஸ், தனியார் நிறுவன பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் உட்பட 2 பேர் உயிரிழந்த சம்பம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 4 Oct 2019, 1:06 pm
காஞ்சிபுரம் மாவட்டம் ஏனாத்தூரை சேர்ந்தவர் கன்னியம்மாள் (75). இவர் உடல்நல குறைவால் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் நேற்று அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனால் 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.
Samayam Tamil 1


கன்னியம்மாளுடன் அவரது மகள் சரஸ்வதி மற்றும் மறுத்து உதவியாளர் தினகரன் ஆகியோர் உடன் சென்றனர். இந்நிலையில் ஆம்புலன்ஸ் ஏனாத்தூரை கடந்த போது முன்னால் சென்று கொண்டிருந்த தனியார் நிறுவனத்தின் பேருந்து மீது பலமாக மோதி விபத்துக்குள்ளானது.


இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ஜெயக்குமார் சம்பவ இடத்திலேயே பலியாகினார். மருத்துவ உதவியாளர் தினகரன் மற்றும் சிகிச்சை நோயாளி கன்னியம்மாள் , சரஸ்வதி ஆகியோர்கள் படுகாயம் அடைந்த நிலையில், அவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவ மருத்துவமனையை நோக்கி புறப்பட்டனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே நோயாளி கன்னியம்மாள் உயிரிழந்தார் . மேலும் படுகாயமடைந்த அவருடைய மகள் சரஸ்வதி மற்றும் மருத்துவ உதவியாளர் தினகரன் ஆகியோருக்கு சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து தொடர்பாக பாலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் .

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் 108 அவசர ஊர்தி வாகனத்தில் பிரேக் ஃபெயிலியர் பிரச்சினை உள்ளதால் அவ்வப்போது பிரேக் பிடிக்கவில்லை என இஎம்டி நிர்வாகத்திடம் தகவல் அளித்தும் அவர்கள் இந்த குறைபாட்டை சீர் படுத்தாத காரணத்தினால் இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்த செய்தி