ஆப்நகரம்

இராமநாதபுரம்: ஆயுதபூஜை கொண்டாடிய ஆம்புலன்ஸ் பணியாளர்கள்!

இராமநாதபுரம் மாவட்டத்தில் பல இடங்களில் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள், பச்சிளம் குழந்தை பராமரிப்பு ஆம்புலன்ஸ் பணியாளர்கள் ஆயுத பூஜை கொண்டாடினர்.

Samayam Tamil 7 Oct 2019, 3:52 pm
ஆயுத பூஜையை முன்னிட்டு பணிபுரியும் இடங்களில் பலரும் தங்கள் தொழில் சார்ந்த உபகரணங்களை சுத்தம் செய்து பூஜை செய்துவருகின்றனர். அந்தவகையில் இராமநாதபுரத்தில் ஆம்புலன்ஸ் பணியாளர்கள் தங்கள் வாகனத்தை சுத்தம் செய்து பூஜைசெய்தனர்.
Samayam Tamil Untitled collage (8)


இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் பச்சிளம் குழந்தைகள் பிரிவுகளில் ரூபன், கொத்தராஜ் தலைமையிலும், பரமக்குடி அரசு மருத்துவனையில் திருமுகம், அருண் தலைமையிலும், இராமேஸ்வரத்தில் லட்சுமணன் தலைமையிலும் ஆயுத பூஜை இன்று கொண்டாடப்பட்டது.
திருவாடானையில் அன்பு தலைமையிலும் கீழக்கரையில் ஜெயந்த் தலைமையிலும் நயினார் கோவிலில் காளிதாஸ் தலைமையிலும் ஆயுதபூஜை கொண்டாடப்பட்டது.

மேலும், முதுகுளத்தூர் பச்சிளம் குழந்தை பிரிவு சார்பில் முத்துச் செல்வம் தலைமையிலும், சாயல்குடியில் பாண்டி தலைமையிலும், ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. இதில் மருத்துவ பணியாளர்கள், ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.

அடுத்த செய்தி