ஆப்நகரம்

அமித் ஷா சென்னை வருகை திடீர் ரத்து: இதுதான் காரணமா?

மத்திய உள்துறை அமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவருமான அமித் ஷாவின் சென்னை வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது

Samayam Tamil 6 Jan 2021, 10:34 pm
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் காய்களை நகர்த்த தொடங்கியுள்ளன. எந்தக் கூட்டணியில் எந்தக் கட்சிகள் இணையும், எந்த கட்சிகள் விலகும் என்பது குறித்த விவாதங்கள் எழத் தொடங்கிவிட்டன. திரைமறைவில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று கொண்டிருந்த நிலையில், தற்போது இந்த விவகாரங்கள் ஊடக வெளிச்சம் பெற்றுள்ளது.
Samayam Tamil அமித் ஷா
அமித் ஷா


அந்த வகையில், அதிமுக பாஜக கூட்டணி தொடருமா என்ற கேள்வி எழுந்ததற்கிடையே, கடந்த நவம்பர் 21ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவருமான அமித் ஷா தமிழக அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்தார். அப்போது, “முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி தொடரும் என நம்பிக்கை இருக்கிறது. அதிமுக ஆட்சிக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்” என்று மறைமுகமாக கூட்டணியை உறுதி படுத்தினார் அமித் ஷா.

இந்த சூழலில், துக்ளக் வார இதழின் 51ஆவது ஆண்டு விழா, வருகிற 14ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடக்க உள்ளது. இதில் பங்கேற்பதற்காக அமித் ஷா சென்னை வரவுள்ளதாகவும், அப்போது கூட்டணி குறித்து ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோருடன் அவர் பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் கூறப்பட்டது.

சசிகலாவுக்காக சிறையிலேயே காத்திருக்கும் அந்த 2 பேர்: என்ன காரணம்?

இந்த நிலையில், அமித் ஷாவின், தமிழ்நாட்டு வருகை திடீரென ரத்து செய்யப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் பிரிட்டனில் பரவி வரும் மரபணு மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் பரவி வருவதாலும், ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த அமித் ஷா இந்த சூழலில் தமிழகம் செல்வது சரியாக இருக்காது என்ற ஆலோசனைகள் வழங்கப்பட்டதால் அவர் தனது வருகையை ரத்து செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி