ஆப்நகரம்

புரேவி புயல்: முதல்வரிடம் விசாரித்த அமித் ஷா

புரேவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் பேசியுள்ளார்.

Samayam Tamil 3 Dec 2020, 12:11 pm
புரேவி புயல் நேற்று இரவு இலங்கையில் கரையைக் கடந்த நிலையில் தென் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. பாம்பன் முதல் கன்னியாகுமரிக்கு இடைப்பட்ட பகுதியில் புரேவி கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது புயல் பாம்பனுக்கு 110 கிலோ மீட்டர் தொலைவிலும், குமரிக்கு 310 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
Samayam Tamil edappadi palanisamy


புரேவி புயல் காரணமாக தென் தமிழகம் முழுவதும் கனமழை பெய்யும் என்றும் பல இடங்களில் அதி கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம், வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் இரு நாள்களாக மழை பெய்து வருகிறது. சென்னையின் நேற்றிரவு விடிய விடிய மழை பெய்துள்ளது.

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென் மாநிலங்களுக்கு பேரிடர் மீட்புக்குழுவினர் விரைந்துள்ளனர். அங்கு தொடர்ந்து பாதுகாப்பு மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபடவுள்ளனர்.

மாசம் மூணு மழை அந்த காலம், வாரம் மூணு புயல் இந்த காலம்!

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் புரேவி புயல் தாக்க உள்ள தமிழ்நாடு, கேரளா மாநிலங்களின் முதல்வர்களை தொடர்பு கொண்டு தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார். மோடி அரசு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தர தயாராக இருப்பதாகவும், பல்வேறு தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அமித் ஷா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் புயலை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவிடம் எடுத்துரைத்துள்ளார்.

ஜனவரியில் தமிழக பள்ளிகளைத் திறக்க திட்டம்? அரசுக்கு அழுத்தம்!

முன்னதாக நிவர் புயலை தமிழக அரசு சிறப்பாக கையாண்டது என பிரதமர் மோடி வாழ்த்து கூறியது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி