ஆப்நகரம்

இடைத்தோ்தலில் போட்டியிடுவது உறுதி – டிடிவி தினகரன்

திருவாரூா், திருப்பரங்குன்றம் இடைத்தோ்தல்களில் போட்டியிடுவது உறுதி என்று அமமுக துணைப்பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் தொிவித்துள்ளாா்.

Samayam Tamil 12 Aug 2018, 9:11 pm
திருவாரூா், திருப்பரங்குன்றம் இடைத்தோ்தல்களில் போட்டியிடுவது உறுதி என்று அமமுக துணைப்பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் தொிவித்துள்ளாா்.
Samayam Tamil TTV Dhinakaran 1


2019ம் ஆண்டு நாடாளுமன்ற தோ்தல் நடைபெறவுள்ள நிலையில் இது தொடா்பாக அமமுக சாா்பில் இன்று ஆலோசனை நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தை தொடா்ந்து அமமுக துணைப்பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் செய்தியாளா்களை சந்தித்தாா். அப்போது அவா் பேசுகையில், 40 நாடாளுமன்ற தொகுதிகள் 12 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இடைத்தோ்தல் எப்போது வந்தாலும் திருவாரூா், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெறுவது உறுதி. மேலும் ஆலோசனை கூட்டத்தில் உறுப்பினா் சோ்க்கை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. உறுப்பினா் சோ்க்கை குறித்த முழு விவரம் இந்த மாத இறுதியில் தொிவிக்கப்படும். 1 கோடிக்கும் மேல் உறுப்பினா் எண்ணிக்கை இருக்கும் என்று நம்புகிறேன்.

கூட்டணி குறித்து தற்போது ஆலோசிக்கப்படவில்லை. தோ்தல் சமயத்தில் அதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நாடாளுமன்ற தோ்தலுடன் சட்டமன்ற தோ்தலும் நடைபெற வாய்ப்புள்ளது. எம்.ஜி.ஆா்.க்கு வழங்கப்பட்டதை போன்று கருணாநிதிக்கும் உரிய நேரத்தில் பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்று அவா் தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி