ஆப்நகரம்

''அம்மா நீங்கள் ஏன் அரசியல் வாரிசை தேர்வு செய்யவில்லை'' - அதிமுக தொண்டர்கள் கதறல்!!

''அம்மா நீங்கள் ஏன் அரசியல் வாரிசை தேர்வு செய்யவில்லை'' என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அதிமுக தொண்டர்கள் அழுது தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

TOI Contributor 8 Feb 2017, 3:17 pm
''அம்மா நீங்கள் ஏன் அரசியல் வாரிசை தேர்வு செய்யவில்லை'' என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அதிமுக தொண்டர்கள் அழுது தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
Samayam Tamil amma why didnt you choose a political heir ask aiadmk workers as panneerselvam sasikala war heats up
''அம்மா நீங்கள் ஏன் அரசியல் வாரிசை தேர்வு செய்யவில்லை'' - அதிமுக தொண்டர்கள் கதறல்!!


தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டு, தொடர்ந்து 75 நாட்கள் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது, ஒரு நாளும் கட்சித் தொண்டர்களோ, அரசியல் முக்கியப் புள்ளிகளோ ஜெயலலிதாவை பார்க்க அனுமதிக்கப்படவில்லை. இதையேதான் நேற்றைய பேச்சிலும் முதல்வர் பன்னீர் செல்வம் வெளிப்படுத்தி இருந்தார். பன்னீர் செல்வத்தின் நேற்றைய பேச்சுக்குப் பின்னர் அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று நியாயம் கேட்டு வருகின்றனர்.

அவரது சமாதிக்கு சென்ற அதிமுக தொண்டர்கள், ''அம்மா நீங்கள் ஏன் அரசியல் வாரிசை தேர்வு செய்யவில்லை. எங்களை அனாதையாக்கிவிட்டு போய் விட்டீர்களே, ஏன் இவ்வாறு செய்தீர்கள் என்று கை நிறைய பூ வைத்துக் கொண்டு, கும்பிடுவது போன்று ஆதங்கத்துடன் அம்மாவின் உண்மை விசுவாசிகள் கேட்டு வருகின்றனர்.

''தற்போது கட்சிக்கு இருவர் உரிமை கோருகின்றனர். இவர்களில் யாருக்கு நாங்கள் ஆதரவு கொடுப்பது, சொல்லுங்கள் அம்மா.... '' என்று கதறி அழுதவாறு அமர்ந்துள்ளனர்.

சமாதிக்கு தனது 3 வயது குழந்தையுடன் வந்திருந்த சைதாப்பேட்டையச் சேர்ந்த மகாலட்சுமி என்பவர் கூறுகையில், ''நாங்கள் எங்களது தலைவரை தேர்வு செய்தோம். நாங்கள் பன்னீர் செல்வத்தையோ, சசிகலாவையோ தேர்வு செய்யவில்லை. யார் வேண்டும் என்பதை எங்களிடம்தான் கேட்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

‘Amma, why didn’t you choose a political heir,’ ask AIADMK workers as Panneerselvam-Sasikala war heats up

அடுத்த செய்தி