ஆப்நகரம்

அவசர சட்டம் நிரந்தர தீர்வு கிடையாது : இதான் ஒரே வழி!

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மாநில அரசு தயார் செய்துள்ள அவசர சட்டம் நிரந்தரமான தீர்வு கிடையாது.

TOI Contributor 20 Jan 2017, 3:25 pm
சென்னை: ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மாநில அரசு தாயார் செய்துள்ள அவசர சட்டம் நிரந்தரமான தீர்வு கிடையாது.
Samayam Tamil ammend pca is trending
அவசர சட்டம் நிரந்தர தீர்வு கிடையாது : இதான் ஒரே வழி!


கடந்த 2011, ஜூலை 11ல் காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில், காளைகளை, மத்திய சுற்றுசூழல், வனத்துறை அமைச்சகம் சேர்த்தது. இதனால், தான் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை உருவானது. இதற்கு பிறகு இப்பட்டியலில் இருந்து காளைகளை நீக்க எந்த நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்கவில்லை. இந்நிலையில், தமிழக அரசு தற்போது அவசர சட்டத்தை ஏற்படுத்தி, அதை மத்திய உள்துறை அமைச்சகம் மூலம் குடியரசு தலைவருக்கு அனுப்பியுள்ளது.

இதற்கு எப்பயும் அனுமதி கிடைக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் மத்திய அரசு உள்ளது. ஆனால் இது வெறும் தற்காலிக தீர்வு மட்டுமே. விலங்குகள் காட்சிப்படுத்தப்படும் பட்டியலில் இருந்து காளைகளை மத்திய அரசு விலக்குவது மட்டுமே இப்பிரச்சனைக்கு நிரந்தரமான தீர்வு என முன்னாள் நீதிபதிகள் உட்பட பலரும் தெரிவித்துள்ளனர்.

இக்கோரிக்கையை வலியுறுத்தி டிவிட்டரில் #ammendpca என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆனது. இப்பிரச்சனையின் வெற்றி சட்ட திருத்தத்தில் தான் உள்ளது. விலங்குகள் வதை தடுப்பு சட்டம் 160ல் திருத்தம் செய்வதால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு ஜல்லிக்கட்டு உரிமை தொடரும். இந்த சட்டத்தின் உட்பிரிவு 11படி, ஜல்லிக்கட்டு விலங்குகளுடனான சண்டை என கூறுகிறது. அதில் மாற்றம் செய்ய வேண்டும். தவிர, பிரிவு 11/3ன் படி, கலாசாரம், பாரம்பரிய நிகழ்வுகளில் காளைகளை பயன்படுத்த கூடாது என தெரிவிக்கிறது. அதை நீக்க வேண்டும். அடுத்த கூட்டத்தொடரிலேயே இதை செய்ய முடியும். ஆனால் அதற்காக தமிழக எம்.பி.,க்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும். மக்களும் எழுச்சி மூலம் இதை சாதிக்க வேண்டும்.

The Court categorised bulls as not being performing animals, anatomically not designed for that, but are forced to perform, inflicting pain and suffering.

அடுத்த செய்தி