ஆப்நகரம்

அந்தர் பல்டி: என்ன ஆச்சு டிடிவி தினகரனுக்கு?

அதிமுக மற்றும் அமமுக இணைய வாய்ப்பில்லை என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்

Samayam Tamil 6 Jun 2022, 6:50 pm
அமமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அக்கட்சியின் பொது செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக அரசை கடுமையாக விமர்சித்தார்.
Samayam Tamil டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்


ஊடக வெளிச்சத்துக்காகவே அரசு அலுவலங்களில் ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்வதாக தெரிவித்த டிடிவி தினகரன், அப்பாவுக்கு சிலை திறப்பதற்கு பதிலாக தேர்தல் வாக்குறுதிகளை அவர் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர், “சசிகலா பாஜகவிற்கு வந்தால் ஏற்றுக் கொள்வோம் என்று நயினார் நாகேந்திரன் கூறிவருகிறார். அதுகுறித்து சசிகலாதான் பதில் கூற வேண்டும். அதிமுக மற்றும் அமமுக இணைய வாய்ப்பில்லை. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை அரசு கண்டறிய வேண்டும்.” என்றும் தெரிவித்தார்.

முன்னதாக, அதிமுகவில் ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ். இணைப்புக்கு பின்னர் சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்ட மன்னார்குடி குடும்பத்தினர் கட்சியின் இருந்து முழுவதுமாக ஓரங்கட்டப்பட்டனர். அதன்பின்னர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற டிடிவி தினகரன், அமமுக எனும் கட்சியை நடத்தி வருகிறார்.
பேருந்துகளில் இனி இதற்கெல்லாம் தடை? பயணிகள் ஷாக்!
அதிமுகவை கைபற்றுவது தான் தனது ஒரே நோக்கம் எனவும், அதற்காகவே அமமுகவை ஆரம்பித்ததாகவும் டிடிவி தினகரன் உள்ளிட்ட அக்கட்சியினர் கூறி வந்த நிலையில், அமமுக -அதிமுக இணைய வாய்ப்பில்லை என்று டிடிவி தினகரன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சசிகலாவுக்கும், டிடிவி தினகரனுக்கும் ஏற்கனவே மனக்கசப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், டிடிவியின் இந்த கருத்து அரசியல் அரங்கில் உற்று நோக்கப்படுகிறது.

அடுத்த செய்தி