ஆப்நகரம்

தினகரன் அணியில் அடுத்த விக்கெட்: நாள் மட்டும் குறிக்கவில்லை!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அதிருப்தி நிர்வாகி புகழேந்தி சேலத்தில் தமிழ்நாடு முதல்வர் இல்லத்தில் சந்தித்துப் பேசியுள்ளார்.

Samayam Tamil 25 Oct 2019, 1:09 pm
அமமுகவிலிருந்து முக்கிய நிர்வாகிகள் விலகி மாற்றுக் கட்சிகளில் சேர்ந்து வரும் நிலையில் பெங்களூர் புகழேந்தி இன்று தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சேலத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியுள்ளார்.
Samayam Tamil Untitled collage (1)


இந்தச் சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த புகழேந்தி, “இடைத்தேர்தலில் 50 ஆயிரம் வாக்குகளுக்கும் அதிகமாக முன்னிலை பெற்று வெற்றி பெற்றதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வந்தேன். நானும் அவரும் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நண்பர்கள்.

டிடிவி தினகரன் பதவி விலக வேண்டும்: அமமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்

சின்னமா சிறைக்குப் போவதற்கு முன்னால் இரண்டு காரியங்களை இருவரிடம் ஒப்படைத்தார். முதலாவது, ஆட்சி, அதிகாரத்தை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைத்தார். அவர் வீறு நடைபோட்டு சரித்திரம் படைத்து வருகிறார்.

மற்றொன்று, இன்னொருவரிடம் துணைப் பொதுச்செயலாளர் பதவியை ஒப்படைத்தார். அது எப்படி இருக்கிறது என உங்களுக்கே தெரியும். அவர் பெயரைக் கூட நான் சொல்லமாட்டேன். எனது பெயரை சொல்வதற்கு அவருக்கு நேரம் இல்லை என்று கூறினாரே, அதே போல் அவரது பெயரை சொல்ல எனக்கு நேரம் இல்லை. விசுவாம் என்றால் என்னவென்றே தெரியாதவர் அவர்” என்று கூறினார்.

சசிகலா விடுதலையில் சிக்கல்: கைவிரித்த சிறைத்துறை இயக்குநர்

டிடிவி தினகரன் பெயரை உச்சரிக்கமாட்டேன் என்று கூறிய தினகரன் பின்னர் அவரது பெயரை குறிப்பிட்டே அதிருப்தியை வெளிப்படுத்த தொடங்கினார். “தினகரன் பின்னால் கொடி பிடித்து அலைந்தோம். ஆனால் அவர் நன்றி மறந்துவிட்டார். இனிமேல் நடக்கப் போவதை நீங்கள் பார்க்கத் தானே போகிறீர்கள். நான் இப்போது அதிமுகவில் சேரவரவில்லை. சேர்வதாக இருந்தால் பத்திரிகையாளர்களாகிய உங்களிடம் கூறியபின்னர்தான் சேருவேன்” என்று கூறினார்.

AIADMK: இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிக்கு என்ன காரணம்? திமுக சறுக்கியது எப்படி!

அதிமுகவிலிருந்து விலகி வந்து டிடிவி தினகரன் தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உருவானது. தினகரன் பின்னால் வந்த எம்எல்ஏக்களின் பதவி பறிபோன நிலையில் மக்களவைத் தேர்தலோடு அந்தத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. ஆனால் அதில் ஒரு இடத்தில்கூட தினகரன் தலைமையிலான அமமுக வெற்றிபெறாத நிலையில், அதிமுக ஆட்சியை தக்கவைக்கத் தேவையான இடங்களைப் பெற்றது.

அதிமுகவில் சசிகலாவா? டிடிவி தினகரன் சொல்வது என்ன?

ஏற்கெனவே செந்தில் பாலாஜி திமுகவில் சேர்ந்த நிலையில் அவரைத் தொடர்ந்து தினகரனின் வலக்கரமாக அறியப்பட்ட தங்கதமிழ்ச்செல்வனும் திமுகவில் இணைந்தார். மேலும் பல முக்கிய நிர்வாகிகள் அதிமுக, திமுகவில் தங்களை இணைத்துக்கொண்டனர். இந்நிலையில் புகழேந்தி அதிமுகவில் தன்னை இணைத்துக்கொள்வதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளார் என அதிமுக, அமமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த செய்தி