ஆப்நகரம்

தனித்துவிடப்படுவது சசிகலாவா, தினகரனா? மகிழ்ச்சியில் இபிஎஸ்

சசிகலாவை வரவேற்ற அமமுக நிர்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

Samayam Tamil 20 Apr 2022, 7:09 am
சசிகலா திருச்சி சென்ற போது அவரை வரவேற்ற அமமுக நிர்வாகிகள் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
Samayam Tamil sasikala vs ttv


சசிகலா சிறையில் இருந்தபோது அவரது ஆதரவாளர்கள் சிதறிப்போய்விடக்கூடாது என்பதற்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற அமைப்பை தொடங்கினார் டிடிவி தினகரன். கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். 2019ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற இடைத் தேர்தல், அதே ஆண்டு இறுதியில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஆகியவற்றில் பெரியளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் கணிசமான வாக்குகளைப் பெற்றது அமமுக.

சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலா அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்ட நிலையில் அமமுக பக்கம் செல்லவில்லை. அதுமட்டுமல்லாமல் கட்சியை கலைத்துவிடு என சசிகலா தினகரனிடம் கூறியதாகவும், அதற்கு அவர் மறுத்துவிட்டதாகவும் தகவல் வெளியாகின. தேர்தல் சமயத்தில் அரசியலிலிருந்து ஒதுங்குவதாக சசிகலா அறிவித்தது தினகரனுக்கு பிடிக்கவில்லை. தொடர்ந்து தினகரனுக்கும் சசிகலாவுக்கும் இடையே சுமுக உறவு பேணப்படவில்லை. இது ஒரு கட்டத்தில் சசிகலா பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் அமமுக நிர்வாகிகள் கலந்துகொள்ள கூடாது என வாய்மொழி உத்தரவும் போடப்பட்டது. தினகரனும் சசிகலாவை சந்திப்பதை கவனமாக தவிர்க்க தொடங்கினார்.
அண்ணாமலை மீது அதிருப்தி: பொன்னாருக்கு அடிக்கும் ஜாக்பாட்!
ஜெயலலிதாவை தலைவியாக கொண்ட அதிமுகவும், அமமுகவும் எதிரும் புதிருமாக இருப்பதால் தனித்தனியாக சென்று ஜெ நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவார்கள். அதேபோல் சசிகலா கணவர் நடராஜன் நினைவிடத்தில் மரியாதை செலுத்த சசிகலாவும் தினகரனும் வெவ்வேறு நேரத்தில் சென்றனர். சசிகலாவை சந்தித்த அதிமுக நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் கட்சியிலிருந்து நீக்குகின்றனர். அதேபோல் சசிகலாவை வரவேற்ற திருச்சி வடக்கு மாவட்ட அமமுக அம்மா பேரவை மாவட்ட செயலாளர் பாலகுமார், முசிறி தெற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் மற்றும் முசிறி நகர செயலாளர் ராமசாமி ஆகியோரை தினகரன் கட்சியிலிருந்து நீக்கியுள்ளார்.
ஓரங்கட்டப்படும் பிடிஆர்? தங்கம் தென்னரசுவை முன்னிறுத்துகிறாரா ஸ்டாலின்?
ஒரு பக்கம் எடப்பாடி பழனிசாமி தன்னை ஓரங்கட்ட துடிக்கும் நிலையில் டிடிவி தினகரன் தரப்பும் அதே வேலையை செய்வதால் சசிகலாவுக்கு நெருக்கடி உருவாகியுள்ளது. அதே சமயம் அமமுகவில் உள்ள பெரும்பாலானோர் சசிகலாவுக்காகவே அக்கட்சியில் இணைந்தனர். எனவே அவர்களை வெளியே கொண்டுவர சசிகலா திட்டமிட்டுள்ளதாக சொல்கிறார்கள். அவ்வாறு வெளியே வந்தால் அமமுகவின் பலம் குறைந்து டிடிவி தனித்துவிடப்படுவார் என்கிறார்கள்.

அதிமுகவில் உள்ள சசிகலா ஆதரவாளர்கள், அங்கிருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகள், அமமுகவில் உள்ள சசிகலா ஆதரவாளர்கள், அங்கிருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகள் ஆகிய அனைவரையும் இணைத்து சசிகலா புதிய அமைப்பை கட்ட வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள்.

அடுத்த செய்தி