ஆப்நகரம்

ஆசியாவிலேயே உயரமான கம்பத்தில் ஏற்றபட்ட அமமுக கொடி!

ஆசியவிலேயே மிக உயரமான கொடிக்கம்பத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொடி ஏற்றப்பட்டுள்ளது.

Samayam Tamil 5 Mar 2019, 1:41 pm
ஆசியவிலேயே மிக உயரமான கொடிக்கம்பத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொடி ஏற்றப்பட்டுள்ளது.
Samayam Tamil 59786


ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது, எடப்பாடி பழனிசாமி மற்றும் டிடிவி தினகரன் ஒரு அணியாகவும், பன்னீர் செல்வம் ஒரு அணியாகவும் செயல்பட்டனர். இதைத்தொடர்ந்து சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்ற பிறகு, எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர் செல்வம் ஒன்றாக இணைந்து டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவை ஒத்துக்கினர்.

இதைத்தொடர்ந்து டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இதற்கான கட்சி கொடிய்யும் அறிவித்தார். இந்நிலையில் விருநகர் மாவட்டம் ஸ்ரீவல்லிபுத்தூர் அருகேயுள்ள கிருஷ்ணன் கோவில் பகுதியில் அமமுக கட்சியின் கொடிகம்பம் உள்ளது. அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், 123 அடி உயர கொடிக்கம்பத்தில் தனது கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். 20 அடி நீளம், 30 அடி உயரமும் கொண்ட கொடி ஏற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து மக்கள் கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் பேசிய தினகரன் ‘நாடாளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியை கைப்பற்றி இந்தியாவின் பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். விருதுநகர் மற்றும் தென்காசி பாராளுமன்ற தேர்தலில் மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று கூறினார்.

அடுத்த செய்தி