ஆப்நகரம்

அதிமுக அரசைக் கண்டித்து தங்க தமிழ்செல்வன் உண்ணாவிரதப் பேராட்டம்!

ஆண்டிப்பட்டி தொகுதியில் அடிப்படை வசதி செய்து கொடுக்காததை கண்டித்து அமமுக சார்பில் தங்க தமிழ்செல்வன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

Samayam Tamil 10 Nov 2018, 5:13 pm
ஆண்டிப்பட்டி தொகுதியில் அடிப்படை வசதி செய்து கொடுக்காததை கண்டித்து அமமுக சார்பில் தங்க தமிழ்செல்வன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
Samayam Tamil thanga tamil selvan protest1


தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ.,க்களின் தொகுதிகளில் அரசின் எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் ஏற்படுத்தப்படவில்லை. எனவே, அனைத்து தொகுதிகளிலும், அமமுக எம்எல்ஏ.,க்கள் சார்பில் நவம்பர் மாதம் உண்ணாவிரதப் பேராட்டம் நடத்தப்படும் என்று அமமுக தலைவர் டிடிவி தினகரன் அறிவித்திருந்தார். அதன் முதற்கட்டமாக, இன்று அமமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ தங்க தமிழ்செல்வன் ஆண்டிப்பட்டி தொகுதியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.மேலும், தமிழக அரசைக் கண்டித்து அடுத்த இரண்டு மாதங்களுக்கும் அந்தந்த தொகுதியில் அமமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

பின்னர், அமமுக.,வின் தலைவர் டிடிவி தினகரன் இன்று மாலை 5.00 மணியளவில் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து வைத்தார். அப்போது கூட்டத்தில் பேசிய தினகரன், விரைவில் கட்சியையும் ஆட்சியையும் மீட்டெடுப்போம் என்றும், எந்த தேர்தல் வந்தாலும் அதில் வெற்றி பெறுவோம் என்றும் தெரிவித்தார்.

அடுத்த செய்தி