ஆப்நகரம்

சசிகலா விடுதலை: அமமுகவினருக்கு தினகரன் போட்ட உத்தரவு!

அமமுக நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்து ஆலோசனை நடத்துகிறார் தினகரன்.

Samayam Tamil 17 Jan 2021, 10:01 am
சசிகலா விடுதலையாக இன்னும் பத்து நாள்கள் உள்ள நிலையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அனைத்து மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
Samayam Tamil ammk ttv dhinakaran meeting with party executives in chennai ahead of sasikala release
சசிகலா விடுதலை: அமமுகவினருக்கு தினகரன் போட்ட உத்தரவு!


சசிகலா விடுதலையால் வெளியே வந்த தினகரன்

கொரோனா பொது முடக்க காலத்தில் டிடிவி தினகரன் கட்சி நிர்வாகிகளை காணொலி காட்சி மூலம்கூட சந்திக்கவில்லை. சசிகலாவை முன்கூட்டியே வெளியே கொண்டுவருவதற்கான பணிகளை வழக்கறிஞர்களுடன் சேர்ந்து முன்னெடுத்து வந்தார். ஆனால் அதற்கு சரியான பலன் கிடைக்கவில்லை. சிறைத்துறை அறிவித்த ஜனவரி 27ஆம் தேதிதான் அவர் விடுதலையாவார் என்பது உறுதியாகியுள்ளது.

எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிப்பு!

சசிகலா விடுதலை மற்றும் சட்ட மன்றத் தேர்தல் பணிகள் ஆகியவற்றை மனதில் கொண்டு டிடிவி தினகரன் தனது கட்சி நிர்வாகிகளை இன்று சந்திக்கிறார். இன்று (ஜனவரி 17) முன்னாள் முதல்வரும், அதிமுகவின் நிறுவனருமான எம்ஜிஆரின் 104வது பிறந்த நாள். இதை முன்னிட்டு டிடிவி தினகரன் சென்னை அண்ணா சாலை ஸ்பென்சர் பிளாசா எதிரே அமைந்துள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த திட்டமிட்டுள்ளார்.

கெத்து காட்டத் தயாராகும் அமமுகவினர்!

தமிழ்நாட்டில் இனி ஒருவாரம் இப்படித்தான் இருக்கும்: வானிலை ஆய்வு மையம்!

கூட்டமாக சென்று மாலை அணிவித்து வரும் வழக்கமான நிகழ்ச்சியாக அல்லாமல் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடுள்ளனர். மத்திய சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் சேப்பாக்கம் எல். ராஜேந்திரன் பிரம்மாண்ட அலங்காரங்களையும் சிறப்பு ஏற்பாடுகளையும் செய்துள்ளார். சென்னை சுற்று வட்டார மாவட்டங்களிலிருந்து ஏராளமான அமமுக தொண்டர்களையும் அனைத்து மாவட்ட செயலாளர்களையும் அழைத்துள்ளனர்.

நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்த டிடிவி தினகரன்

எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை செலுத்திய பின் டிடிவி தினகரன், ராயப்பேட்டையில் அமைந்துள்ள அமமுக தலைமை அலுவலகத்துக்குச் செல்கிறார். அங்கே மாவட்டச் செயலாளர்களோடும், மண்டலப் பொறுப்பாளர்களோடும் ஆலோசனை நடத்த உள்ளார். நேற்றிரவே நிர்வாகிகள் அனைவரும் சென்னைக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது.

வரவேற்பு ஏற்பாடு!

மீண்டும் தமிழகம் வரும் ராகுல் காந்தி: கொங்கு மண்டலத்தில் விசிட்!

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் பணிகள் குறித்து பேசப்படுவதைவிட சசிகலாவை வரவேற்பது குறித்துதான் அதிகம் பேசப்படும் என அமமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது. ஓசூரிலிருந்து சென்னை வரை அமமுக நிர்வாகிகள் ஒவ்வொரு பகுதிக்கும் வரவேற்பு ஏற்பாட்டுக்காக நியமிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு முழுதும் சுவர் விளம்பரங்கள், மற்ற விளம்பரங்கள் தொடர்பான ஏற்பாடுகள் குறித்தெல்லாம் கட்சி அலுவலகத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது என்கின்றனர்.

அடுத்த செய்தி