ஆப்நகரம்

அமமுகவை பதம் பார்க்கும் எடப்பாடி: அடுத்தடுத்து விழும் விக்கெட்கள்!

அமமுக இளம் பெண்கள் பாசறை மாநில செயலாளர் அதிமுகவில் இணைந்தார்.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 13 Mar 2023, 12:47 pm
அதிமுகவில் பொதுக்குழு தொடர்பான வழக்கு தீர்ப்பு வெளியான நிலையில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தொடர்வதற்கு எந்த தடையும் இல்லை என்ற நிலை உருவானது.
Samayam Tamil edappadi palanisamy


எடப்பாடி பழனிசாமி தலைமையை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்திய நிலையில் மாற்றுக் கட்சியினர் பலரும் அதிமுகவை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.

பாஜகவிலிருந்து ஐடி விங்க் முக்கிய நிர்வாகிகளான சிகேடி நிர்மல் குமார், திலீப் கண்ணன் உள்ளிட்டவர்கள் பிற அணிகளைச் சேர்ந்தவர்கள் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

திருச்சியில் திருப்பம் யாருக்கு? வைத்திலிங்கத்துக்கு எடப்பாடி ஸ்கெட்ச்! ஓபிஎஸ் அணியின் ஆணி வேரை பிடுங்க பிளான்!

இந்நிலையில் சிவகங்கையில் சனிக்கிழமை அதிமுக சார்பாக பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற அந்த கூட்டத்தின் மூலம் தெற்கு பகுதியிலும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு இருக்கிறது என்பதை நிரூபித்துள்ளோம் என அவரது ஆதரவாளர்கள் கூறிவருகின்றனர்.

இந்த கூட்டத்துக்குப் பின்னர் நேற்று (மார்ச் 12) எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து அமமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர். அமமுக முன்னாள் தலைமை நிலைய செயலாளரும், திருப்பத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கே.கே உமாதேவன் மற்றும் அமமுக செய்தி தொடர்பாளரும், மாநில இளைஞரணி செயலாளராக இருந்த கோமல் ஆர்.கே அன்பரசனும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

இந்நிலையில் இன்று (மார்ச் 13) அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாநில இளம் பெண்கள் பாசறைச் செயலாளர் மருத்துவர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
தமிழகத்தில் மீண்டும் கொரோனா விதிமுறைகள்: அமைச்சர் கொடுத்த எச்சரிக்கை!
இந்நிகழ்வின்போது, அதிமுக அமைப்புச் செயலாளரும், தூத்துக்குடி வடக்கு மாவட்டக் கழகச் செயலாளருமான கடம்பூர் ராஜூ உடனிருந்தார். தொடர்ந்து மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணைந்து வருவதால் கட்சி கடந்து எடப்பாடி பழனிசாமி தாக்கம் செலுத்தக் கூடியவராக உள்ளார் என அவரது ஆதரவாளர்கள் கூறிவருகின்றனர்.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி