ஆப்நகரம்

தீப்பிடித்து கருகிய சொகுசுப்பேருந்து: 36 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைப்பு!

தருமபுரி அருகே தொப்பூர் பகுதியில் தனியார் சொகுசு பேருந்து தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில், பேருந்திலிருந்த 36 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Samayam Tamil 10 Dec 2018, 4:04 pm
தருமபுரி மாவட்டம் தொப்பூர் பகுதியில் தனியார் சொகுசு பேருந்து தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில், பேருந்திலிருந்த 36 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தனர்.
Samayam Tamil தீப்பிடித்து கருகிய சொகுசுப்பேருந்து: 36 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைப்பு!
தீப்பிடித்து கருகிய சொகுசுப்பேருந்து: 36 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைப்பு!


மதுரையில் இருந்து நேற்றிரவு பெங்களூருக்கு புறப்பட்ட கே.பி.என். சொகுசு பேருந்தில், 36 பயணிகள் சென்று கொண்டிருந்தனர். மதுரையில் இருந்து ராஜா என்பவர் பேருந்தை ஓட்டிய நிலையில், சேலத்தில் இருந்து மாதேஸ்வரன் என்பவர் பேருந்தை இயக்கத் தொடங்கினார்.

நள்ளிரவு சுமார் 3 மணியளவில், தருமபுரி அருகே தொப்பூர் பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது பின்பக்க எஞ்சினில் இருந்து புகை வந்துள்ளது. இதை கண்ணாடி வழியாக பார்த்த ஓட்டுநர் மாதேஷ், உடனடியாக பேருந்தை நிறுத்தி பயணிகளை கீழே இறக்கி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார். அதன்பிறகு, தொப்பூர் பகுதிக்கு வரவழைக்கப்பட்ட மற்றொரு பேருந்தில், பயணிகள் அனைவரும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதனிடையே, சுமார் முக்கால் மணிநேரம் கழித்து வந்த தீயணைப்பு படையினர், எஞ்சின் பகுதியில் தண்ணீரை அடித்து, தீயைக் கட்டுப்படுத்தினர். இதையடுத்து சுமார் 5 மணியளவில், பேருந்தின் ஏ.சியில் மீண்டும் தீப்பிடித்து மளமளவென பரவியதால், பேருந்து முழுமையாக எரிந்தது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி