ஆப்நகரம்

இனி மேல் அப்படி நடக்க கூடாது: அமுதா ஐஏஎஸ் வெளியிட்ட எச்சரிக்கை ஆடியோ!

ஏரி, குளங்களை ஏலம் விடுவது தொடர்பாக அமுதா ஐஏஎஸ் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Samayam Tamil 30 Nov 2021, 4:16 pm
அதிரடி நடவடிக்கைகளுக்கு பெயர் பெற்றவர் அமுதா ஐஏஎஸ். தர்மபுரி, செங்கல்பட்டு மாவட்டங்களில் ஆட்சியராக பணியாற்றி பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டவர் அமுதா. அந்த சமயத்தில் மணல் மாஃபியாவை துணிச்சலுடன் எதிர்த்து நடவடிக்கை எடுத்து கவனம் பெற்றார். கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா, அப்துல்கலாம் ஆகியோரது இறுதிச் சடங்கு நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார்.
Samayam Tamil amudha ias audio


2015 வெள்ளத்தின் போது உடனடியாக களத்தில் இறங்கி மீட்பு பணிகளில் ஈடுபட்டார். துணிச்சலான, நேர்மையான அதிகாரி என்று பாராட்டப்படும் அமுதா பிரதமர் அலுவலகத்தின் கூடுதல் செயலாளராக பணியாற்றி வந்த நிலையில் பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக பணியாற்றி வந்தார் . இந்நிலையில் தமிழக அரசு மீண்டும் அமுதா ஐஏஎஸ்ஸை தமிழகத்துக்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டது. அமுதாவுக்கு என்ன பணியை ஸ்டாலின் கொடுக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை கண்காணிக்க மற்றும் மழை பாதிப்பு பகுதிகளில் மீட்பு, நிவாரண பணிகளை துரிதப்படுத்த 12 மாவட்டங்களுக்கு தலா ஒரு ஐஏஎஸ் அதிகாரி நியமனம் செய்யப்பட்டார். அதில் செங்கல்பட்டு மாவட்டம் அமுதா ஐஏஎஸ்ஸுக்கு வழங்கப்பட்டது.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு: இந்த முறை அந்த தவறு நடக்காதாம்!
கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை துரிதப்படுத்தி வருகிறார். இந்த சூழ்நிலையில் அமுதா ஐஏஎஸ் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அரசுக்கு தெரியப்படுத்தாமல் ஏரி குளங்களை குத்தகைக்கு விடுவதை கண்டித்துள்ளார். ஏலத் தொகையை அரசு அலுவலகத்தில் செலுத்தாமல் செலவு கணக்கு காண்பிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அவர் “இதுபோன்ற நடைமுறை எதாவது பஞ்சாயத்தில் நடப்பது உறுதியானால், ஏலம் விட்டவர்கள், ஏலம் எடுத்தவர்கள், அதற்குத் துணையாக இருந்தவர்கள் என அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.
தனித்துவிடப்பட்ட சசிகலா: இது தவிர வேற ஆப்ஷன் இல்லையா?
“ஏரிகளை ஏலம் விடுவது தொடர்பாக இதுவரை அலுவலகங்களில் இருந்து எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை. இதனால் இதற்கு முன் ஏரி எதாவது ஏலம் விடப்பட்டிருந்தால் அது செல்லாது. அப்படி நடந்தால் ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இது முக்கிய பிரச்சினை. அனைவரும் இதை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டும். புதிய ஊராட்சி மன்றம் சார்பில் குளங்களுக்கு வேண்டுமானால் ஏலம் விடலாம். ஆனால், ஏரிக்கு அவர்களால் எதுவும் செய்ய முடியாது. யாரும் ஏரியை உரிமை கொண்டாட முடியாது. ஏரியின் கட்டுப்பாடுகள் அனைத்தும் அரசு அலுவலகங்களிடம் தான் உள்ளது.
எடப்பாடிக்கு அத்தனை பக்கமும் செக்: இந்த முறை தப்ப முடியாதா?
மேலும், தண்ணீர் செல்வதாகக் கூறி சில பகுதிகளில் பொதுமக்களே ஏரியை உடைத்துவிடுவதாகவும் புகார்கள் வருகிறது. இதுபோன்ற நடவடிக்கையிலும் யாரும் ஈடுபடக் கூடாது. அப்படி யாராவது செய்தால் அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் அமுதா ஐஏஎஸ் அந்த ஆடியோவில் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி