ஆப்நகரம்

தமிழக உள்ளாட்சி தேர்தல்: மாநில தேர்தல் ஆணையம் முக்கிய உத்தரவு

தமிழக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக முக்கிய உத்தரவை மாநில தேர்தல் ஆணைய செயலாளர் வெளியிட்டுள்ளார்.

Samayam Tamil 30 Jul 2021, 9:39 pm
தமிழ்நாட்டில் உள்ள நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி, புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்ட ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் உள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்


இந்நிலையில், நெல்லை தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை 9 மாவட்டங்களில் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் வியூகங்களை ஊரக கிளை செயலாளர் முதல் கட்சியின் தலைவர்கள் வரை வகுத்து வருகின்றனர். இந்நிலையில், புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


வெளியேற்றப்படும் ராதாகிருஷ்ணன் நகர் பூர்வகுடிகள்: ஆரிய ஆதிக்க செயல் - சீமான்

மேற்கண்ட 9 மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் மாநில தேர்தல் ஆணைய செயலாளர் சுந்தரவல்லி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், '' நடக்கவிருக்கும் ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் அனுபவம் உள்ள மற்றும் அரசியல் கட்சிகளை சாராத, அரசியல் கட்சிகளின் அனுதாபியாக இல்லாத நபர்களை தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்க வேண்டும் என 9 மாவட்ட ஆட்சியர்களுக்கும், தேர்தல் அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி