ஆப்நகரம்

தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறையா? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!

புதுச்சேரியைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலளித்துள்ளார்.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 16 Mar 2023, 11:59 am
தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா என்பது குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
Samayam Tamil anbil mahesh poyyamozhi


இன்ஃப்ளுயன்ஸா எச்1என்1 வகை காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. குழந்தைகளையும், முதியவர்களையும் அதிகம் இந்த வைரஸ் பாதிப்பதாக தகவல் வெளியாகும் நிலையில் புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவித்தது.

அந்த வகையில் இன்று முதல் மார்ச் 26ஆம் தேதி வரை 11 நாள்களுக்கு 1 முதல் 8ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் இதே போல் விடுமுறை அறிவிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது, அதே போல் 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு ஸ்டாலின் -பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சந்திப்பு: பட்ஜெட்டில் உள்ள சிறப்பம்சங்கள் என்னென்ன? இறுதித் தேர்வை முன்கூட்டியே தொடங்கி நடத்த திட்டமிடப்படுமா என்றும் கேள்விகள் எழுந்தன. இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இது போன்ற மருத்துவ காரணங்களால் நெருக்கடி வரும் போது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, முதலமைச்சர் அலுவலகம் ஆகியவற்றின் அறிவுறுத்தல்களின் அடிப்படையிலேயே முடிவுகளை எடுப்போம். தற்போதைய சூழலில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதற்கான அவசியம் ஏதும் ஏற்படவில்லை என்று நேற்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார். எனவே தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படாது.

தேர்வுகளை முன்கூட்டியே முடிக்க திட்டம் இருக்கிறதா என்று கேட்கிறார்கள். ஏற்கெனவே அறிவித்த கால அட்டவணைப் படியே தேர்வுகள் நடைபெறும். தேர்வு தேதியை மாற்றும் திட்டம் இல்லை.
சேகர் பாபு பாணியில் பி.மூர்த்தி: மதுரையில் ஸ்டாலின் புகைப்படக் கண்காட்சி!
பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்கள் அதிகளவில் அப்செண்ட் ஆகியுள்ளனர். அதற்கான காரணங்களை கண்டறிய வேண்டும். எனவே இன்று மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்த உள்ளோம். மாணவர்கள் தேர்வு எழுத வராததற்கான காரணங்கள் என்ன, சமூக, பொருளாதார காரணங்கள் இருக்கிறதா என்று ஆராய்ந்து அதை சரி செய்வோம்” என்று கூறினார்.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி