ஆப்நகரம்

அகவிலைப்படி உயர்வு: தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்

நடப்பாண்டில், அகவிலைப்படி உயர்வு தொடர்பாக, இதுவரை தமிழக அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடாததற்கு, அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

TOI Contributor 20 Apr 2016, 4:42 pm
நடப்பாண்டில், அகவிலைப்படி உயர்வு தொடர்பாக, இதுவரை தமிழக அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடாததற்கு, அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil anbumani condemns tamil nadu govt over da hike
அகவிலைப்படி உயர்வு: தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்


இதுதொடர்பாக, அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

மத்திய அரசு ஊழியர்களுக்கு, 6% அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டு, ஒரு மாதம் கடந்துவிட்டது. எனினும், இதுவரை தமிழக அரசு தரப்பில் இதுதொடர்பாக, எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. அரசு ஊழியர்கள் நலன் சார்ந்த விவகாரத்தில், தமிழக அரசு அலட்சியமாகவும், எதேச்சதிகாரமாகவும் செயல்படுவது கண்டித்தக்கது. இதில், தமிழக அரசின் அணுகுமுறை சிறிதும் ஏற்றுக் கொள்ள முடியாதது.

இவ்வாறு அதில் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி