ஆப்நகரம்

8 வழிச்சாலை பற்றி ரஜினிக்கு என்ன தெரியும்: அன்புமணி ராமதாஸ் காட்டம்

8 வழிச்சாலை பற்றி நடிகர் ரஜினிக்கு என்ன தெரியும் என்று பாமக் இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

Samayam Tamil 17 Jul 2018, 12:12 pm
8 வழிச்சாலை பற்றி நடிகர் ரஜினிக்கு என்ன தெரியும் என்று பாமக் இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
Samayam Tamil maxresdefault


பா.ம.கதனது 30 வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதற்கான விழா நேற்று சென்னையில் தியாகராயநகரில் உள்ள பா.ம.க அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கட்சி கொடியேற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:

பாமக தனது 30 வது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது. இது சாதாரண விஷயம் அல்ல. நாங்கள் கடந்து வந்த பாதை மிக கடினமானது. சமூதாய பிரச்சனைகளுக்காகநாங்கள் பல போராட்டங்கள் நடத்தி இருக்கிறோம்.

இந்திய அளவில் 2 இட ஒதுக்கீடும், தமிழக அளவில் ஒரு இட ஒதுக்கீடும் பெற்றுத்தந்தது பா.ம.க.தான். தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடும், மத்தியில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்துக்கு அகில இந்திய மருத்துவ படிப்பில் தனியாக இட ஒதுக்கீடும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடும் பெறுவதற்கு முக்கிய காரணம் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

மேலும் தமிழகத்தில் எதிர்கட்சிகள் மதுவிலக்கைஅமல்படுத்துவோம் என்றுகூறுவதே எங்கள் மதுவிலக்கு போரட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும். தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 75 ஆயிரம் மதுக்கடைகளும், தமிழகத்தில்3 ஆயிரத்து 321 மதுக்கடைகளும் மூடியிருப்பதற்குகாரணம் பா.ம.க தான்.

இந்த 8 வழிச்சாலை திட்டத்தை சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடற்கரை சாலை வழியாக நிறைவேற்றினால் தமிழகம் மிகப்பெரிய வளர்ச்சி அடையும். சுற்றுலா மற்றும் தொழில்துறை வளர்ச்சிஏற்படும். அதற்காக 30 ஆயிரம் கோடி ரூபாய் செலவானாலும் நாங்கள் எதற்காக எதிர்ப்பு தெரிவிக்க போகிறோம்.

சினிமா நடிகர்களுக்கு எதார்த்தம் என்ன என்பது தெரியாது? யார் சொல்வதையோ கேட்டுக் கொண்டு சினிமாவில் நடிக்க மட்டும்தான் தெரியும். 8 வழிச்சாலை பற்றி ரஜினிகாந்துக்கு என்ன தெரியும் ? . அதனால்தான்அவர் 8 எட்டு வழிச்சாலைக்கு ஆதரவாக பேசுகிறார்.

என்று அவர் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி