ஆப்நகரம்

பிரதமர் மோடி - அன்புமணி ராமதாஸ் சந்திப்பு

தமிழகத்தில் நிலவும் பல்வேறு பிரச்னைகள் குறித்து, பிரதமர் மோடியை சந்தித்த பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் விளக்கம் அளித்து மனு கொடுத்துள்ளார்.

TNN 10 Aug 2016, 5:37 pm
புதுதில்லி: தமிழகத்தில் நிலவும் பல்வேறு பிரச்னைகள் குறித்து, பிரதமர் மோடியை சந்தித்த பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் விளக்கம் அளித்து மனு கொடுத்துள்ளார்.
Samayam Tamil anbumani ramadoss meets pm modi and speaks about issues in tn
பிரதமர் மோடி - அன்புமணி ராமதாஸ் சந்திப்பு


பிரதமர் மோடியை, தலைநகர் தில்லியில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்தார். இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நீடித்தது. அப்போது, பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளின் உயரத்தை ஆந்திர அரசு தன்னிச்சையாகவும், சட்டவிரோதமாகவும் உயர்த்தி வருவதையும், பாலாற்றின் துணை ஆறுகளின் குறுக்கே புதிதாக தடுப்பணைகளை கட்டி வருவதையும் பிரதமரிடம் சுட்டிக் காட்டினார்.

பாலாறு பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணப்படாவிட்டால் இது மிகப்பெரிய சட்டம் ஒழுங்கு பிரச்சின்பையாக மாறும் ஆபத்து உள்ளது. எனவே, இந்த பிரச்சினையில் பிரதமர் தலையிட்டு தமிழகத்திற்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமரிடம் அன்புமணி கேட்டுக் கொண்டார்.

தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரத்திற்கு முடிவு கட்டப்பர்ட வேண்டும். தேர்தல் அறிக்கையில் இலவசங்களுக்கு தடை விதிக்கப்பட வேண்டும். தேர்தல் பணிகளில் முழுக்க முழுக்க வெளிமாநில அதிகாரிகளை ஈடுபடுத்த வேண்டும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து கருத்துக்கணிப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும். அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவுகளுக்கு உச்சவரம்பு நிர்ணயிக்க வேண்டும். இது குறித்து ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரை செய்ய தேர்தல் சீர்திருத்தங்களுக்காக தனி நாடாளுமன்ற நிலைக்குழு அமைக்க வேண்டும் என்றும் பிரதமரிடம் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கோரினார்.

அதேபோல், மாணவர்களின் கல்விக்கடனை குறித்த காலத்தில் செலுத்தாவிட்டால் அதை வாராக்கடனாக கருதக் கூடாது. கல்விக் கடனை ரிலையன்ஸ் போன்ற தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யக் கூடாது. கல்விக் கடனுக்கான வட்டி மானியத்தை வங்கிகளுக்கு அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்றும் இந்த சந்திப்பின் பொது பிரதமரிடம் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த செய்தி