ஆப்நகரம்

பாலாற்றில் தடுப்பணை உயரத்தை அதிகரிக்கும் ஆந்திரா - போலீசார் குவிப்பு

பாலாற்றில் ஆந்திர அரசு தடுப்பணை உயரத்தை அதிகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து அப்பகுதியில் தமிழக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

TNN 4 Jul 2016, 1:46 pm
வேலூர்: பாலாற்றில் ஆந்திர அரசு தடுப்பணை உயரத்தை அதிகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து அப்பகுதியில் தமிழக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Samayam Tamil andhra constructs dam in palaru high security
பாலாற்றில் தடுப்பணை உயரத்தை அதிகரிக்கும் ஆந்திரா - போலீசார் குவிப்பு


தமிழக - ஆந்திர எல்லைப் பகுதியான புல்லூரி கிராமத்தில் பாலாறு ஓடுகிறது. இதன் குறுக்கே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, ஆந்திர அரசு சிறிய அளவில் தடுப்பணை கட்டியது. இதையடுத்து தடுப்புச் சுவரை 5 அடி வரை உயர்த்தி, தண்ணீரை தேக்கியது.

தற்போது ரூ.45 லட்சம் செலவில் 12 அடி வரை, தடுப்பு சுவரை உயர்த்த ஆந்திர அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதன்மூலம் ஏராளமான ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்று கூறுகின்றனர். மேலும் திடீரென வெள்ளம் வந்தால், அருகிலுள்ள கனகநாச்சியம்மன் கோவில் மூழ்கி விடும் என்று குற்றம்சாட்டுகின்றனர்.

ஆந்திர அரசின் நடவடிக்கையை தடுத்து நிறுத்த, தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவிற்கு கடிதம் எழுதினார். இந்நிலையில் தடுப்பணை உயரத்தை அதிகரிக்கும் முயற்சியில் ஆந்திர அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த செய்தி