ஆப்நகரம்

ஆந்திர பிரதேசத்தை சேர்ந்தவருக்கு பொருத்தப்பட்ட தமிழரின் இதயம்!

விபத்தில் முளைச்சாவு அடைந்த தமிழகத்தை சேர்ந்தவரின் இதயம் ஆந்திர பிரதேசத்தை சேர்ந்தவருக்கு பொருத்தப்பட்டுள்ளது.

Samayam Tamil 17 Jan 2019, 4:00 pm
விபத்தில் முளைச்சாவு அடைந்த தமிழகத்தை சேர்ந்தவரின் இதயம் ஆந்திர பிரதேசத்தை சேர்ந்தவருக்கு பொருத்தப்பட்டுள்ளது.
Samayam Tamil 67566094


தமிழகத்தில் உள்ள கிருஷ்ணகிரிமாவட்டத்தை சொந்த ஊராக கொண்ட 30 வயது நபர் ஆன்லைன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர்ஜனவரி 12 ஆம் தேதிவிபத்துக்குள்ளாகி , பொம்மசந்திரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை மூளைச்சாவடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் அவரின் குடும்பத்தாரின்ஒப்புதலுடன் அவரது இதயமானது ஆந்திர பிரதேசத்தை சேர்ந்தவருக்கு பொருத்தப்பட்டது.

பெங்களூர், மத்திகரை பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு இந்த இதயம் பொருத்தப்பட்டது. பொம்மசந்திரத்திலிருந்துசுமார் 45 நிமிடங்களில் ஆம்புலன்ஸ் மத்திகரையில் உள்ள மருத்துவமனைக்கு சென்றது. இதனால் உடனடியாக இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அடுத்த செய்தி