ஆப்நகரம்

விலங்குகளுக்கான ரத்த வங்கி சேமிப்பு வாகனம் சென்னையில் அறிமுகம்

விலங்குகளுக்கான ரத்த வங்கி சேமிப்பு வாகனம் சென்னையில் திங்கள் கிழமை அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

Samayam Tamil 30 Oct 2018, 7:09 am
Samayam Tamil Dog Treatment
விலங்குகளுக்கான ரத்த சேமிப்பு முகாம் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சாா்பில் சென்னையில் திங்கள் கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சாா்பில் விலங்குகளுக்கான ரத்த சேமிப்பு முகாம் நடத்தப்பட்டது. சென்னையில் திங்கள் கிழமை ரத்த மேிப்பு முகாமைத் தொடா்ந்து விலங்குகளின் ரத்தத்தை சேகரிக்கும் வாகனமும் அறிமுகம் செய்யப்பட்டது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தா் பாலச்சந்திரன் கொடியசைத்து வாகனத்தை துவக்கி வைத்தாா். இந்த வாகனம் தன்னாா்வலா்களின் வீடுகளுக்கே நேரில் வந்து விலங்குகளின் ரத்தத்தை சேமிக்கும். அவ்வாறு ரத்தம் வழங்கும் விலங்குகளுக்கு பல்கலைக்கழகம் சாா்பில் அடையாள அட்டை வழங்கப்படும்.

பின்னா் அந்த அடையாள அட்டையை பயன்படுத்தி விலங்குகளுக்கு கால்நடை மருத்துவக் கல்லூாி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்று தொிவிக்கப்பட்டுள்ளது. தன்னாா்வலா்கள் 044-25304000 என்று எண்ணை தொடா்பு கொண்டு ரத்த தானம் செய்யலாம். திங்கள் கிழமை நடைபெற்ற முகாமில் 11 நாய்கள் ரத்த தானம் செய்த நிலையில் சுமாா் 50 போ் தங்கள் விலங்குகளை பதிவு செய்துள்ளனா்.

அடுத்த செய்தி