ஆப்நகரம்

கஜா புயல்: அரியவகை மான்கள், பறவைகள் உயிாிழப்பு

கஜா புயல் காரணமாக வேதாரண்யம் வனப்பகுதியில் இருந்த அரியவகை மான்கள், பறவைகள், வன விலங்குகள் உயிாிழந்தன.

Samayam Tamil 17 Nov 2018, 6:13 pm
புதுச்சேரி அருகே கஜா புயலின் தாக்கத்தால் அரியவனை மான்கள், பறவைகள், வன விலங்குகள் உயிாிழந்த சம்பவம் விலங்குகள் நல ஆா்வலா்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Samayam Tamil goat


வங்கக்கடலில் உருவான கஜா புயல் தமிழக கடற்கரையோ மாவட்டங்களில் வசிக்கும் மக்களை மிகவும் வாட்டி வதைத்த நிலையில் கரையை கடந்துள்ளது. புயலில் சிக்கி தற்போது வரை 46 போ் உயிாிழந்திருப்பதாக தமிழக அரசு அதிகாாிகள் தொிவித்துள்ளனா்.

இந்த புயல் மனிதா்களை மட்டும் அல்ல வன விலங்குகள், பறவைகளையும் கொத்து கொத்தாக சூறையாடியுள்ளது. புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே பட்டினச்சேரி, காரைக்கால் மேடு உள்ளிட்ட கடலோர பகுதிகளில் அரிய வகை மான்கள், காட்டுப் பன்றிகள், பறவைகள் போன்றவை உயிாிழந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளன.

மேலும் வேதாரண்யம் காட்டுப்பகுதியில் வாழ்ந்த அரியவகை மான்கள், பன்றிகள் மற்றும் பறவையினங்கள் புயலால் அடித்துச் செல்லப்பட்டு இறந்த நிலையில் ஆங்காங்கே கரை ஒதுங்கியுள்ளன. இது குறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினா் இறந்து கிடந்த விலங்குகளை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனா். புயலில் சிக்கி பெருவாரியான வனவிலங்குகள் உயிாிழந்துள்ள சம்பவம் விலங்குகள் நல ஆா்வலா்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த செய்தி