ஆப்நகரம்

உடைகிறதா அண்ணா பல்கலைக்கழகம், அமைக்கப்பட்டது அமைச்சர்கள் குழு!

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மத்திய அரசின் சிறப்பு அந்தஸ்து கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதால், அதை 2 ஆகப் பிரிக்கலாமா என்பது குறித்து ஆய்வு செய்ய அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகளைக் கொண்டு குழு ஒன்றைத் தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.

Samayam Tamil 17 Dec 2019, 6:42 pm
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மத்திய அரசின் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படவுள்ளது. இந்தச் சிறப்பு அந்தஸ்தினால் இப்போது உள்ள இட ஒதுக்கீடு முறை கிடைக்காமல் போகலாம் எனக் கூறப்படுகிறது.
Samayam Tamil images (10)


அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் பல்கலைக்கழகங்களையும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பல்கலைக்கழகங்களுக்கும் தனுக்கு கீழ் வைத்துள்ளது. அதே நேரத்தில் அண்ணா பல்கலைக்கழகம் நாட்டில் மாணவர்களுக்குச் சிறந்த கல்வியை வழங்கும் முக்கிய பல்கலைக்கழகமாகவும் திகழ்கிறது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை, தமிழ்நாடு அரசு நிர்ணயித்துள்ள இட ஒதுக்கீட்டு முறையின் அடிப்படையில் நடைபெறும். இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மத்திய அரசின் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகின.

மத்திய பாஜக அரசுக்கு எதிராக ஓரணியில் திரண்ட எதிர்க்கட்சிகள்: குடியரசுத் தலைவருடன் சந்திப்பு!!

அப்படி அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மத்திய அரசின் சிறப்பு அந்தஸ்து கிடைத்தால், அதன்பின் மாணவர் சேர்க்கை மத்திய அரசு நிர்ணயித்துள்ள இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நடக்கும் எனக் கூறப்படுகிறது. அதே நேரத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படும். உதாரணமாக ரூ. 1000 கோடி நிதி ஆண்டுதோறும் பல்கலைக்கழகத்திற்கு ஒதுக்கப்படும் எனப் பல வசதிகளும் வழங்கப்படும்.

இதுகுறித்த விவாதம் முன் எழுந்தபோது, தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்குக் கோரிக்கை ஒன்றை வைத்தது. அந்த கோரிக்கையில், “மத்திய அந்தஸ்து கிடைத்தாலும், அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேர்க்கை தமிழ்நாடு பின்பற்றும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலே அமைய வேண்டும்” எனக் கோரியிருந்தது.


லத்திசார்ஜா பண்றீங்க... இந்தா வாங்கிக்கோ... போலீஸாரை நையப்புடைக்கும் போராட்டக்காரர்கள் : வைரலாகும் வீடியோ!!

இந்த கோரிக்கைகளுக்கு மத்திய அரசிடமிருந்து இப்போதுவரை எந்த பதிலும் வரவில்லை. இதன் காரணமாகத் தமிழ்நாடு அரசு, அமைச்சர்கள் செங்கோட்டையன், அன்பழகன், சி.வி. சண்முகம், ஜெயக்குமார் உள்பட 6 அமைச்சர்கள், 3 ஐஏஎஸ் அதிகாரிகள் இடம் பெற்றுள்ள குழு ஒன்றை அமைத்துள்ளது.

இந்த குழு அண்ணா பல்கலைக்கழகத்தை 2ஆகப் பிரிக்கலாமா, அப்படிப் பிரிப்பதால் ஏற்படும் நன்மை என்ன, என்பது குறித்து விவாதிக்கும். அதன்படி பிரிக்கப்பட்டால், சீர்மிகு பல்கலைக்கழகம் என ஒரு பல்கலைக்கழகமும் மற்றொன்று அண்ணா பல்கலைக்கழகம் என்ற பெயரிலும் பிரிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த குழு தீவிர ஆலோசனைகளை மேற்கொண்ட பிறகு தனது அறிக்கையைத் தமிழ்நாடு அரசுக்குத் தாக்கல் செய்யும். குழு தாக்கல் செய்யும் அறிக்கையின்படி, தமிழ்நாடு அரசு இந்த விவகாரத்தில் முடிவெடுக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி