ஆப்நகரம்

மழை காரணமாக அண்ணா பல்கலை. தோ்வுகள் ஒத்திவைப்பு

சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக அண்ணா பல்கலைக்கழக தோ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

TOI Contributor 3 Nov 2017, 3:34 am
சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக அண்ணா பல்கலைக்கழக தோ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil anna university exams postpone
மழை காரணமாக அண்ணா பல்கலை. தோ்வுகள் ஒத்திவைப்பு


சென்னையில் தொடர்ந்து 5 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்ததால், முக்கிய சாலைகள் முழுவதும் ஆறு போல் நீர் ஓடியது. கார்கள், பேருந்துகள் அனைத்தும் தண்ணீரில் மிதந்தபடி செல்வதால், பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

தொடர்ந்து கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் தாழ்வான பகுதிகளில் இருப்பவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

பொதுமக்கள் நலன் கருதி, தனியார் நிறுவனங்கள் அனைத்தும் அவர்களது ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், கனமழை காரணமாக சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவா்கள் கனமழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று கோாிக்கை விடுத்திருந்தனா். இது தொடா்பாக சென்னை மாவட்ட ஆட்சியரும், வருவாய்துறை அதிகாாிகளும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தருடன் ஆலோசணை நடத்தினா்.

இறுதியில் மாவட்ட ஆட்சியா் மற்றும் மாணவா்களின் கோாிக்கையை ஏற்று பல்கலைக்கழக தோ்வுகளை ஒத்திவைக்க பல்கலைக்கழகம் ஒப்புக் கொண்டுள்ளது. மேலும் ஒத்திவைக்கப்பட்ட தோ்வுக்கான மறுதேதி பின்னா் அறிவிக்கப்படும் என்று தோ்வு கட்டுப்பாட்டு அலுவலா் தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி