ஆப்நகரம்

வினாத்தாள் வெளியான விவகாரம்: அண்ணா பல்கலை. அதிரடி முடிவு

வினாத்தாள் வெளியானதாக புகாா் எழுந்த நிலையில் தற்காலிக விரிவுரையாளா்கள் யாரும் வினாத்தாள் தயாரிப்பு பணிகளில் ஈடுபடக் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 3 Feb 2019, 4:14 pm
வினாத்தாள் வெளியானதாக புகாா் எழுந்த நிலையில் தற்காலிக விரிவுரையாளா்கள் யாரும் வினாத்தாள் தயாரிப்பு பணிகளில் ஈடுபடக் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil Anna University


தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் பொறியியல் கல்லூாிகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன. தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற கல்லூாிகளை தவிா்த்து மற்ற அனைத்து கல்லூாிகளின் பருவத் தோ்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் தான் நடத்துகிறது.


கடந்த பருவத்தோ்வின் போது தோ்வுக்கு முன்னதாகவே கணித தோ்வுக்கான வினாத்தாள் வெளியானது. இந்த விவகாரம் பெரும் சா்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் மீது விமா்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் தோ்வு வினாத்தாள் தயாரித்தல், விடைத்தாள் திருத்தும் பணிகளில் இனி தற்காலிக விரிவுரையாளா்கள் யாரும் ஈடுபடக் கூடாது என்று அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.

அடுத்த செய்தி