ஆப்நகரம்

செமஸ்டர் தேர்வுகள் தள்ளிவைப்பு: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!

நடப்பு செமஸ்டருக்கான தேர்வுகள் தள்ளிவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Samayam Tamil 5 Dec 2020, 10:08 pm

பொறியியல் மாணவர்களுக்கான நடப்பு செமஸ்டர் தேர்வுகள் தள்ளிவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் டிசம்பர் 14ஆம் தேதி முதல் தொடங்கும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil அண்ணா பல்கலைக்கழகம்


இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் முடிந்தபிறகு மற்ற மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. தேர்வு தொடர்பான அட்டவணை அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக மார்ச் 25ஆம் தேதியன்று நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. வீடியோ வாயிலாக கல்லூரி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

தமிழக அரசு பேருந்தில் இலவச பயணம் - அமைச்சர் அதிரடி அறிவிப்பு!

இறுதி ஆண்டு பருவத் தேர்வு தவிர பல்கலைக்கழகங்கள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், தொழில்நுட்ப கல்லூரிகளின் அரியர் தேர்வுகளை ரத்து செய்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்பு அறிவித்திருந்தார். அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்திய அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவித்திருந்தார். இதற்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

டிசம்பர் 7ஆம் தேதி முதல் கல்லூரிகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், செமஸ்டர் தேர்வுகளை தள்ளிவைப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அடுத்த செய்தி