ஆப்நகரம்

வீரப்பன் பெயரில் அண்ணா பல்கலை. துணை வேந்தர் சூரப்பாவுக்கு மிரட்டல்!

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விடுவதாக மிரட்டல் கடிதம் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Samayam Tamil 6 Nov 2020, 10:06 pm
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை உயர்புகழ் தகுதி (Institute of Eminence) பெற்ற நிறுவனமாக அறிவிக்க வேண்டும்; அதற்குத் தேவையான நிதியை பல்கலைக்கழகமே திரட்டிக் கொள்ளும் என்று மத்திய அரசுக்கு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா கடிதம் எழுதியுள்ளார். இதற்காக தமிழக அரசு வழங்க வேண்டிய ரூ.1,750 கோடியை அண்ணா பல்கலைக்கழகமே வழங்கும் எனவும் அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil சூரப்பா
சூரப்பா


ஆனால், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப் பட்டாலும் கூட, 69% இட ஒதுக்கீடுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்காததாலும், அண்ணா பல்கலைக்கழகமே நிதி வழங்கும் என தெரிவித்துள்ளதால் மாணவர்களின் கல்விக் கட்டணம் உயர் வாய்ப்புள்ளதாகவும் தமிழகத்தில் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதையடுத்து, அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார். மேலும், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என்று மத்திய அரசுக்குத் தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.

தமிழகத்தில் விரைவில் கவர்னர் ஆட்சி? பாஜக பெண் நிர்வாகி ட்வீட்!

அந்த கடிதத்தில், “அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கெனவே நிதிப் பற்றாக்குறையில் உள்ளது. அதனால் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை. பல்கலைக்கழகத் துணை வேந்தர் சூரப்பா கூறும் ஆலோசனைகள் ஏற்புடையதாக இல்லை. பல்கலைக்கழகமே தேவையான நிதியைத் தானே சுயமாக திரட்டிக் கொள்ள இயலாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விடுவதாக வீரப்பன் என்ற பெயரில் மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தை திரும்பப் பெற கோரி அக்கடிதத்தில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

துணை வேந்தர் சூரப்பாவுக்கு வந்த கடிதத்தை கைப்பற்றி கோட்டூர்புரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீரப்பன் என்ற பெயரில் வந்துள்ள அக்கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அடுத்த செய்தி