கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையின் முக்கிய அம்சமாக, நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்கள் கடந்த மார்ச் 16 ஆம் தேதி முதல் மூடப்பட்டுள்ளன.
இதில், சென்னையில் உள்ள புகழ்பெற்ற அண்ணா பல்கலைக்கழகமும் அடங்கும். மாதக்கணக்கில் பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளதால், பட்டப்படிப்பு மாணவர்களுக்கான ஆண்டு பருவத் தேர்வு இம்முறை நடத்தப்படவில்லை. முந்தைய பருவத் தேர்வுகளின் அடிப்படையில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு மதிப்பெண்களை வழங்கலாம் என்று மத்திய அரசு அண்மையில் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், பேராசிரியர்கள், நிர்வாக பணியாளர்கள் உள்ளிட்டோர் நாளை முதல் பணிக்கு வர வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் இன்று (ஜூலை 5) அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. பணியாளர்கள் பல்கலைக்கழகம் வந்து செல்ல பேருந்து வசதி ஏற்படுத்தி தரப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
பத்தாம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் கணக்கிடும் பணி: அரசு புதிய உத்தரவு!!
பல்கலைக்கழகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் வரும் கிண்டி பொறியியல் கல்லூரி, குரோம்பேட்டை எம்ஐடி உள்ளிட்டவை நாளை முதல் செயல்படும் என்றும் பல்கலைக்கழக நிர்வாகம் கூறியுள்ளது.
இருப்பினும், 2020- 21 ஆண்டில் மாணவர்களுக்கான வகுப்புகளை தொடங்குவது குறித்து எவ்வித அறிவிப்பையும் அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதில், சென்னையில் உள்ள புகழ்பெற்ற அண்ணா பல்கலைக்கழகமும் அடங்கும். மாதக்கணக்கில் பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளதால், பட்டப்படிப்பு மாணவர்களுக்கான ஆண்டு பருவத் தேர்வு இம்முறை நடத்தப்படவில்லை. முந்தைய பருவத் தேர்வுகளின் அடிப்படையில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு மதிப்பெண்களை வழங்கலாம் என்று மத்திய அரசு அண்மையில் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், பேராசிரியர்கள், நிர்வாக பணியாளர்கள் உள்ளிட்டோர் நாளை முதல் பணிக்கு வர வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் இன்று (ஜூலை 5) அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. பணியாளர்கள் பல்கலைக்கழகம் வந்து செல்ல பேருந்து வசதி ஏற்படுத்தி தரப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
பத்தாம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் கணக்கிடும் பணி: அரசு புதிய உத்தரவு!!
பல்கலைக்கழகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் வரும் கிண்டி பொறியியல் கல்லூரி, குரோம்பேட்டை எம்ஐடி உள்ளிட்டவை நாளை முதல் செயல்படும் என்றும் பல்கலைக்கழக நிர்வாகம் கூறியுள்ளது.
இருப்பினும், 2020- 21 ஆண்டில் மாணவர்களுக்கான வகுப்புகளை தொடங்குவது குறித்து எவ்வித அறிவிப்பையும் அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.