ஆப்நகரம்

அண்ணாமலை பல்கலை.யில் நிலுவைச் சான்றிதழ் சிறப்பு முகாம்!

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நிலுவைச் சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம் நடக்கிறது.

Samayam Tamil 28 Sep 2018, 10:02 am
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதுார கல்வியில் படித்த மாணவர்களுக்கு நிலுவைச் சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம் இன்று முதல் மூன்று நாட்கள் நடக்கிறது.
Samayam Tamil அண்ணாமலை பல்கலை.யில் நிலுவைச் சான்றிதழ் சிறப்பு முகாம்!
அண்ணாமலை பல்கலை.யில் நிலுவைச் சான்றிதழ் சிறப்பு முகாம்!


அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதுாரக் கல்வி மூலம் கடந்த 1991ஆம் ஆண்டு முதல் மே 2017ஆம் ஆண்டு கால கட்டத்தில் படித்து முடித்து தேர்ச்சி பெற்ற மாணவர்களின் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல் கடந்த 27 ஆண்டுகளாக மாணவர்கள் பெற்றுக்கொள்ளாமல் நிலுவையில் உள்ளது.

இந்நிலுவைச் சான்றிதழ் வழங்கும் நான்காவது சிறப்பு முகாம் தேர்வுத்துறை அலுவலகத்தில் இன்று முதல் வரும் 30-ஆம் தேதி வரை நடக்கிறது. தொலைதுார கல்வியில் படித்து முடித்து சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியல் பெறாத மாணவர்கள் முகாமில் நேரில் பெற்றுக்கொள்ளலாம்.

சான்றிதழைப் பெற வரும் மாணவர்கள் தங்களின் ஏதேனும் ஓர் புகைப்பட அடையாள அட்டையுடன் நேரில் வந்து பல்கலைக்கழகத்தில் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையைச் செலுத்தி, அனைத்து வகையான சான்றிதழ்களையும் பெற்றுக் கொள்ளலாம் என்று பல்கலைக்கழக துணைவேந்தர் முருகேசன் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி