ஆப்நகரம்

சதுரகிரி கோயிலில் அன்னதானம்: இந்து சமய அறநிலையத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!

சதுரகிரி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Samayam Tamil 2 Jul 2019, 9:59 pm
சதுரகிரி மலையில் அமைந்துள்ள அருள்மிகு சுந்தர மகாலிங்கம் சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
Samayam Tamil சதுரகிரி கோயிலில் அன்னதானம்: இந்து சமய அறநிலையத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!
சதுரகிரி கோயிலில் அன்னதானம்: இந்து சமய அறநிலையத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!


மதுரை திருநகரை சேர்ந்த ஆனந்தகுமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார், அதில், மதுரை மாவட்டம் பேரையூர் அருகே சதுரகிரி மலையில் அமைந்துள்ள அருள்மிகு சுந்தர மகாலிங்க சுவாமி கோயிலில் மிகவும் பிரசித்தமான கோயிலாகும். இந்த கோயிலில் ஒவ்வொரு அமாவாசை, பெளர்ணமி மற்றும் விழாக்காலங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

சாமி தரிசனம் செய்ய வருபவர்களில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், வயது முதிந்தோர், மாற்றுதிறனாளிகள் என அனைத்து தரப்பினரும் வந்து செல்கின்றனர். அப்போது கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். மலையேறி வந்த பக்தர்களுக்கு சாமி தரிசனம் முடித்தவுடன்அன்னதானம் வழங்கப்படுவதால் ஏழை பக்தர்கள் திருப்தியுடன் செல்கின்றனர். ஆனால் தற்போது,கோவில் அருகே தனியார் உணவகங்கள் அமைக்க கோவில் நிர்வாகம் அனுமதி அளித்தது. இதையடுத்து அன்னதானம் நிறுத்தப்பட்டது.

தனியார் உணவகத்தில் இட்லி, தோசை போன்ற உணவுகள் அதிக விலையில் விற்கப்படுகிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.

இதுகுறித்து கடந்த ஜூன் 13 ம் தேதி அதிகாரிகளுக்கு மனு அளித்தேன். ஆனால் மனு மீது எவ்வித நடவடிக்கை இல்லை.எனவே அருள்மிகு சுந்தரமகாலிங்க சுவாமிகள் திருக்கோவிலில் அன்னதானம் வழங்க. முகாம்கள் அமைக்க கோவில் நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதிகள் சத்திய நாராயணன், புகழேந்தி ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது, அப்போது மனுதாரரின் கோரிக்கை மனுவை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையருக்கு உத்தரவிட்டனர்.

அடுத்த செய்தி