ஆப்நகரம்

ரெட் அலர்ட் எதிரொலி... நீலகிரியில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 21 Oct 2019, 9:03 pm
தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil announced precaution leave for schools and colleges in nilgris
ரெட் அலர்ட் எதிரொலி... நீலகிரியில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை


கடந்த சில நாட்களாகவே நீலகிரி,கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கடுமையான மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் நிலையும் உள்ளது

இந்நிலையில், கடந்த ஐந்து நாட்களாக நீலகிரி மாவட்டத்தின் சுற்றுப் பகுதிகளில் கடும் மழைப் பொழிவு காணப்பட்டு வருகிறது. தொடர்ந்து பெய்யும் மழைப் பொழிவு குறையாததால் தற்போது நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சூடுபிடித்துள்ளன. மாவட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா தலைமையில் அதிகாரிகள் பலரும் இதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர்.


இந்நிலையில் தற்போது நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா கூறியதாவது,

“ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், முன்னேற்பாடு நடவடிக்கையாக பள்ளி கல்லுரிகளுக்கு தற்போது விடுமுறை வழங்கப்பட்டு உள்ளது. மேலும் நிலச்சரிவு பிரச்சினையை சமாளிக்கும் நோக்கில் பல இடங்கள் கணக்கெடுக்கப்பட்டு அபாய அளவின் அடைப்படையில் வகைப்படுத்தப்ப்பட்டுள்ளன. அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். ” என்று தெரிவித்து உள்ளார்.’

அடுத்த செய்தி