ஆப்நகரம்

இன்னொரு சான்ஸ் ரெடி; பொறியியல் இறுதியாண்டு மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க!

இறுதி செமஸ்டர் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Samayam Tamil 7 Nov 2020, 4:27 pm
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் பொறியியல் கல்லூரிகளின் இறுதியாண்டு மாணவர்களுக்கு கடந்த செப்டம்பர் மாதம் இறுதி செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடைபெற்றன. கொரோனா ஊரடங்கால் தேர்வுகள் தொடர்ந்து தள்ளி போடப்பட்ட வந்த நிலையில், ஒருவழியாக செப்டம்பர் 22 முதல் 29ஆம் தேதி வரை நடத்தி முடிக்கப்பட்டன. இதில் 93 சதவீத மாணவர்களே கலந்து கொண்டனர். அதாவது 17 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. 10 ஆயிரம் மாணவர்களுக்கு தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டன.
Samayam Tamil Anna University


எனவே பாதிக்கப்பட்ட மாணவர்கள் தங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும். இல்லையெனில் முந்தைய தேர்வுகளை அடிப்படையாகக் கொண்டு மதிப்பெண் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த சூழலில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இறுதி செமஸ்டர் தேர்வு நடத்துவது, அரியர் தேர்வுகள் ரத்து செய்வது தொடர்பான வழக்கு நடைபெற்றது.

அதில், இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தியே ஆக வேண்டும். முந்தைய தேர்வுகளை அடிப்படையாகக் கொண்டு தேர்ச்சி வழங்க முடியாது என்று பல்கலைக்கழக மானியக் குழு திட்டவட்டமாகத் தெரிவித்தது.

தமிழக பள்ளிகள் திறப்பு உறுதி? குடும்ப நலத்துறை புதிய உத்தரவு!

இதனைக் கருத்தில் கொண்டு இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு, மறுதேர்வு நடத்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, வரும் நவம்பர் 17ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் சம்பந்தப்பட்ட மாணவர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். தொழில்நுட்ப பிரச்சினைகளைச் சரிசெய்து முறையாக பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி