ஆப்நகரம்

திமுக கவுன்சிலர்களை கடத்தும் அதிமுக..? இராமநாதபுரத்தில் மேலுமொரு கவுன்சிலர் கடத்தல்...

சாத்தையாவின் மகன் ராஜா, இன்னும்ஒருபடி மேலே போய், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யச் சென்று உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Samayam Tamil 7 Jan 2020, 8:26 pm
முதுகுளத்தூர் ஒன்றியத்தில் வெற்றி பெற்ற திமுக ஒன்றிய கவுன்சிலரை அதிமுகவினர் கடத்தியதாக, வென்றவரின் மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
Samayam Tamil dmk admk


ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் ஒன்றியத்தின் 8வது வார்டு திருவரங்கம். இந்த ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார் திமுக வேட்பாளர் சாத்தையா.

இந்நிலையில், சேர்மன் பதவியை அடைய நினைத்த அதிமுக தன் தந்தையை (சாத்தையா) கடத்தி விட்டதாக புகாரளித்துள்ளார்.

அதாவது, முதுகுளத்தூர் அதிமுக ஒன்றியச் செயலாளர் தர்மர் மற்றும் அவருடைய கூட்டாளிகள் 3 பேர் சேர்ந்து கடத்திச் சென்று விட்டதாக சாத்தையாவின் மகன் மகன் ராஜா, முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து முதுகுளத்தூர் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த கடத்தல் சம்பவத்துக்கு, காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய சாத்தையாவின் மகன் ராஜா, மேலும் ஒருபடி மேலே போய், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யச் சென்று உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதேபோல, இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியத்தில் 7 ஆவது வார்டில் வென்ற திமுக கவுன்சிலர் வாசுகியையும் அதிமுகவினர் கடத்தியுள்ளதாக வாசுகியின் கணவர் இன்று காலை புகார் கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

இராமநாதபுரம்: சேர்மன் பதவிக்காக கவுன்சிலரைக் கடத்திய அதிமுக..?

அடுத்த செய்தி