ஆப்நகரம்

நெல்லையில் அதிர்ச்சி; ரூ.500, ரூ.1000 வாங்கி ரூ.40 லட்சம் மோசடி - ஏமாந்த கூலித் தொழிலாளிகள்!

நெல்லைப் பகுதியில் மீண்டும் ஒரு நிதி நிறுவன மோசடி நடந்துள்ளதால், பாதிக்கப்பட்ட மக்கள் அதிர்ச்சி அடைந்து ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.

Samayam Tamil 28 May 2019, 7:55 am
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் ”ரியல் பிலிஸ் ஆக்ரோ ஃபைனான்ஸ்” என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. மக்கள் அளிக்கும் பணத்திற்கு அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தைக் கூறினர்.
Samayam Tamil Money Fraud


ரூ.1 லட்சம் என 5 ஆண்டுகளுக்கு முதலீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளனர். இதில் அப்பாவி மக்கள் ஈர்க்கப்பட்டுள்ளனர். இதனால் சங்கரன்கோவில், திருவேங்கடம், குருவிகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பணம் செலுத்தி வந்தனர்.

மாதந்தோறும் ரூ.500 முதல் ரூ.5000 வரை 5 ஆண்டுகளாக செலுத்தி உள்ளனர். இவர்கள் அனைவரும் தீப்பெட்டி மற்றும் பட்டாசுத் தொழிற்சாலையில் பணியாற்றும் கூலித் தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 5 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில், அந்த நிதி நிறுவனத்திற்கு சென்று பணத்தை திரும்பிக் கொடுக்குமாறு கேட்டுள்ளனர். ஆனால் அவர்கள் கொடுக்கவில்லை. அடுத்த சில மாதங்கள் அந்நிறுவனம் மூடப்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், உடனே நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர். நெல்லைப் பகுதி மக்களிடம் சுமார் ரூ.40 லட்சம் வரை சுருட்டிக் கொண்டு சம்பந்தப்பட்ட நிதி நிறுவன ஊழியர்கள் தலைமறைவாகி உள்ளனர்.

அடுத்த செய்தி