ஆப்நகரம்

Sterlite Protest: ஸ்டெர்லைட் போராட்டம் : இரவோடு இரவாக வீடு புகுந்து சிறுவர்களை தாக்கிய போலீஸார்

ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்ட நிலையில், இரவில் இளைஞர்கள்,சிறுவர்கள் என பாராமல் வீடுபுகுந்து போலீஸார் அடித்துள்ளனர்.

Samayam Tamil 24 May 2018, 10:45 am
தூத்துக்குடி : ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்ட நிலையில், இரவில் இளைஞர்கள்,சிறுவர்கள் என பாராமல் வீடுபுகுந்து போலீஸார் அடித்துள்ளனர்.
Samayam Tamil sterlite protest


ஸ்டெர்லை போராட்டத்தின் 100 வது நாளின் போது ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்தார் அம்மாவட்ட ஆட்சியர்.

இருப்பினும் அதைப்பொருட்படுத்தாமல் மக்கள் பேரணியாக சென்றனர். இதையடுத்து அவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதோடு, அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர்.

இணைய சேவை துண்டிப்பு;

இந்நிலையில் போராட்டம் குறித்தும், உயிரிழந்தவர்கள் குறித்தும் தவறான தகவல் பரப்பப்படுவதால், பதற்றம் அதிகரிக்கிறது என கூறி தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இணைய சேவை துண்டிக்கப்பட்டது. நிலைமை சீராகும் வரை இது தொடரும் என கூறப்பட்டுள்ளது.

சிறுவர்களை தாக்கும் வீடியோ :
இந்நிலையில் இரவில் மின்சாரம் துண்டித்ததோடு, போலீஸார் அப்பகுதியில் வீடு புகுந்து சிறுவர்களை தெருவில் இழுத்து வைத்து போலீஸார் தாக்கும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி