ஆப்நகரம்

போயஸ் கார்டன் இல்லத்தை சுத்தப்படுத்தவே சோதனை: அன்வர் ராஜா

சென்னையில் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை சுத்தப்படுத்தவே வருமான வரித்துறை சோதனை உதவியாக இருக்கும் என அன்வர் ராஜா கூறினார்.

TNN 18 Nov 2017, 2:06 pm
சென்னையில் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை சுத்தப்படுத்தவே வருமான வரித்துறை சோதனை உதவியாக இருக்கும் என அன்வர் ராஜா கூறினார்.
Samayam Tamil anwar raja mp says that it raid happemed to clean the poes garden
போயஸ் கார்டன் இல்லத்தை சுத்தப்படுத்தவே சோதனை: அன்வர் ராஜா


சசிகலா, டிடிவி தினகரன் மற்றும் அவர்களின் குடும்பத்தினர், நண்பர்களின் வீடுகள் மற்றும் அவர்கள் தொடர்புடைய இடங்களில் கடந்த வாரம் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.

இதில், ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பினாமி சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. இந்த ஆவணங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு வருகின்றன.

இதனைத்தொடர்ந்து நேற்று அதிரடியாக போயஸ் கார்டன் இல்லத்தில் சோதனை நடத்தினர் .
இதுபற்றி கருத்து தெரிவித்த அ.தி.மு.க., எம்.பி., அன்வர் ராஜா போயஸ் கார்டன் இல்லத்தில் நடந்த வருமான வரி சோதனைக்கும் அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை'' என்றார்.

ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை சுத்தப்படுத்த வருமான வரித்துறை சோதனை உதவியாக இருக்கும். இந்த சோதனையால் களங்கம் ஏற்படவில்லை, களங்கம் துடைக்கப்படும். போயஸ் கார்டன் இல்லத்தில் ஆவணங்களை பதுக்கி வைத்திருக்கலாம் என்ற தகவல் காரணமாக சோதனை நடத்தி உள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி