ஆப்நகரம்

வக்பு வாாிய தலைவராக பொறுப்பேற்றாா் அன்வர் ராஜா எம்.பி.

தமிழக வக்பு வாாிய தலைவராக அ.தி.மு.க. எம்.பி. அன்வர் ராஜா இன்று பொறுப்பேற்றுக் கொண்டாா்.

Samayam Tamil 30 Apr 2018, 3:39 pm
தமிழக வக்பு வாாிய தலைவராக அ.தி.மு.க. எம்.பி. அன்வர் ராஜா இன்று பொறுப்பேற்றுக் கொண்டாா்.
Samayam Tamil Anwar Raja


தமிழக வக்பு வாாிய தலைவா் பதிவிக்கான தோ்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தோ்தலில் அ.தி.மு.க. எம்.பி. அன்வர் ராஜா மனுத்தாக்கல் செய்திருந்தாா். இதனிடையே அன்வர் ராஜாவின் மகன் நாசா் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக ரெபல்லா என்ற பெண் புகாா் அளித்திருந்தாா்.

மேலும், தன்னை நாசருடன் சோ்த்து வைக்காமல் அன்வா் ராஜா அவரது மகனுக்கு அடைக்கலம் கொடுப்பதாகவும், அவரை வக்பு வாாிய தலைவராக தோ்வு செய்யக் கூடாது என்றும் அந்த பெண் குற்றம் சாட்டினாா். கடந்த சில தினங்களுக்கு முன்பு அன்வர் ராஜா தலைமையில் அவரது மகனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் அன்வா் ராஜா இன்று வக்பு வாாிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டாா். அன்வர் ராஜா பொறுப்பேற்பதை அறிந்த ரெபல்லா பள்ளிவாசல் அருகே தகராறில் ஈடுபட முயன்றாா். காவல் துறையினா் உடனடியாக அவரை அங்கிருந்து அழைத்துச் சென்றனா். இதனைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் பேசிய அன்வர் ராஜா, தனது வளா்ச்சியை கண்டு சிலா் எரிச்சல் அடைகின்றனா். அவா்களது தூண்டுதலின் பேரில் தான் ரெபல்லா தகராறு செய்வதாக குற்றம் சாட்டினாா். மேலும் வருகின்றன காலங்களில் முறையாக வக்பு வாாிய கூட்டங்கள் நடத்தப்படும் என்றும் அவா் தெரிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி