ஆப்நகரம்

ஜெ.,வை பார்க்கவே இல்லை - மருத்துவர்: 2 சூட்கேஸில் ஆவணங்களை சமர்ப்பித்த அப்பல்லோ!

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும், அப்பல்லோ நிர்வாகம் விசாரணை கமிஷனிடம் தாக்கல் செய்துள்ளது.

Samayam Tamil 13 Jan 2018, 12:35 am
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும், அப்பல்லோ நிர்வாகம் விசாரணை கமிஷனிடம் தாக்கல் செய்துள்ளது.
Samayam Tamil apollo has submitted docs of jaylalitha to enquire committee
ஜெ.,வை பார்க்கவே இல்லை - மருத்துவர்: 2 சூட்கேஸில் ஆவணங்களை சமர்ப்பித்த அப்பல்லோ!


மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மர்மமான முறையில் மரணம் அடைந்ததாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி, ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இதில், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெ.,வின் உறவினர்கள் என்று அனைவரிடமும் விசாரணை நடந்து வருகிறது.



அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஜெ.,க்கு இதயம் செயலிழந்ததாக கூறப்பட்டது. அப்போது, அவருக்கு சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இதய சிகிச்சை நிபுணர் மருத்துவர் சுவாமிநாதன் சிகிச்சை அளித்ததாக கூறப்பட்டது. இதன் காரணமாக, விசாரணை கமிஷன் உத்தரவுப்படி, சுவாமிநாதனிடம் நேற்று அரைமணிநேரத்திற்கும் மேலாக விசாரணை நடந்துள்ளது. இந்த விசாரணை தொடர்பாக சுவாமிநாதன் கூறுகையில், ஜெ.,க்கு இதயம் செயலிழந்ததாக கூறப்படும் அன்று, மருத்துவமனையில் 5 மருத்துவர்கள் இருந்தோம். அப்போது, நான் ஜெ.,வை பார்க்கவும் இல்லை, அவருக்கு சிகிச்சை அளிக்கவும் இல்லை. ஜெ.,க்கு அளிக்கப்பட்ட அனைத்து சிகிச்சைகளையும் அப்பல்லோ நிர்வாகவே செய்தது என்று அவர் விளக்கமளித்துள்ளார்.

இந்த நிலையில், ஜெ.,வின் சிகிச்சை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்திற்கு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷன் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவுப்படி, 2 சூட்கேஸ்களில், ஜெ.,வின் சிகிச்சை தொடர்பான அனைத்து ஆவணங்களையும், அப்பல்லோ நிர்வாகம் விசாரணை கமிஷனிடம் நேற்று ஒப்படைத்தது. இதையடுத்து, அப்பல்லோ நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த 2016, செப்.22ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிலிருந்து, டிசம்பர் 5ம் தேதி வரையிலான அனைத்து ஆவணங்களையும் 30 தொகுப்புகளாக 2 சூட்கேஸில் தாக்கல் செய்துள்ளோம் என்று கூறியுள்ளது.



இதற்கிடையில், சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியனும், விசாரணை கமிஷனில் ஆஜராகி தன்னுடைய விளக்கத்தை அளித்துள்ளார். மேலும், சசிகலா தரப்பில் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை வரும் 22ம் தேதி நடக்கயிருக்கிறது. அப்போது, மருத்துவர் சிவக்குமார், 23ல் ஜெ.,உதவியாளர் பூங்குன்றன், 24ல் பெங்களூர் முத்துமாணிக்கம், 25ல் டாக்டர் பாலாஜி ஆகியோரிடமும் விசாரணை நடக்கயிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Apollo has submitted docs of Jaylalitha to enquire committee.

அடுத்த செய்தி