சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவருக்கு காய்ச்சல் என்று பொய் சொன்னதாக அப்பலோ மருத்துவமனை குழுமத்தின் தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாக அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த ஜெயலலிதா டிசம்பர் 5 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக அறிவிக்கப்பட்டது.
அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக பலர் கூறிவந்ததையடுத்து, அவர் மரணம் குறித்து முன்னாள் நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையில் விசாரணை கமிஷனை அமைத்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், அப்பலோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டி, ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதே ஆபத்தான உடல்நிலையில் இருந்ததாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை எதுவும் நடைபெறாமல் இருக்க, அவருக்கு காய்ச்சல் என்று பொய்யான அறிக்கை வெளியிட்டதாகவும் கூறியுள்ளார்.
மேலும், விசாரணைக் கமிஷன் முன் ஆஜராக வேண்டுமென அப்பலோ மருத்துவர்களுக்கு நோட்டீஸ் வந்துள்ளதாகவும். இதுவரை தனக்கு எதுவும் வரவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாக அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த ஜெயலலிதா டிசம்பர் 5 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக அறிவிக்கப்பட்டது.
அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக பலர் கூறிவந்ததையடுத்து, அவர் மரணம் குறித்து முன்னாள் நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையில் விசாரணை கமிஷனை அமைத்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், அப்பலோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டி, ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதே ஆபத்தான உடல்நிலையில் இருந்ததாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை எதுவும் நடைபெறாமல் இருக்க, அவருக்கு காய்ச்சல் என்று பொய்யான அறிக்கை வெளியிட்டதாகவும் கூறியுள்ளார்.
மேலும், விசாரணைக் கமிஷன் முன் ஆஜராக வேண்டுமென அப்பலோ மருத்துவர்களுக்கு நோட்டீஸ் வந்துள்ளதாகவும். இதுவரை தனக்கு எதுவும் வரவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.