ஆப்நகரம்

வெள்ளம், மழையெல்லாம் இருக்கட்டும்: புது வெள்ளை மழையை பார்க்க கிளம்பிய சபாநாயகர்!

சபாநாயகர் அப்பாவு மூன்று நாள்கள் பயணமாக சிம்லா செல்கிறார்.

Samayam Tamil 15 Nov 2021, 6:56 am
ராதாபுரம் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அப்பாவுக்கு சபாநாயகர் பதவியை கொடுத்தார் ஸ்டாலின். கடந்த முறை அவரது வெற்றி சர்ச்சைக்குரிய முறையில் களவாடப்பட்டது என திமுகவினர் கூறிவந்த நிலையில் இம்முறை சபாநாயகராக அவையை வழிநடத்தும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது.
Samayam Tamil appavu


தமிழகமே மழை,வெள்ள பாதிப்பு குறித்து பேசிவருகிறது. அரசு மீட்பு பணிகளையும், நிவாரணப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. அப்பாவு தனது ராதாபுரம் தொகுதியில் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்தார்.

இந்நிலையில் சபாநாயகர்களின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அவர் இன்று சிம்லா செல்கிறார். இன்று காலை டெல்லி செல்லும் அவர் அங்கிருந்து சிம்லா செல்கிறார், புதன்கிழமை மாலை சென்னை திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ள நிவாரணம்: முதல்வரிடம் அள்ளிக் கொடுத்த காவிரி டெல்டா மக்கள்!
ஹிமாச்சல் பிரதேச மாநிலம் சிம்லாவில் நடைபெறும் பேரவைத் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சபாநாயகர் அப்பாவு 3 நாள் பயணமாக நாளை புறப்பட்டுச் செல்கிறார். சென்னையிலிருந்து டெல்லி சென்று பின்னர் அங்கிருந்து சிம்லாவுக்கு அவர் செல்கிறார்.

பல மாநிலங்களின் சபாநாயகர்களும் இந்த மாநாட்டில் கலந்துகொள்கின்றனர். நிவாரணப் பணிகள் ஒரு பக்கம் இருந்தாலும் இந்த மாநாட்டின் முக்கியத்துவம் கருதி இப்பயணத்தை அவர் தவிர்க்கவில்லை என்கின்றனர்.
எதிர்க்கட்சிகளால் கூட குறை சொல்ல முடியாது: முதல்வர் ஸ்டாலினை பாராட்டிய நடிகர் பார்த்திபன்!
இந்தியாவில் உள்ள அனைத்து சட்டப்பேரவை தலைவர்களின் மாநாடு முதன்முறையாக சிம்லாவில் 1921ஆம் ஆண்டு நடைபெற்றது. அதாவது நூறு ஆண்டுகளுக்கு முன்னர். அதன் பின்னர் சிம்லாவில் ஆறு முறை மாநாடுகள் நடைபெற்றுள்ளன. இதன் நூறாண்டை நினைவு படுத்தும்விதமாக இந்த முறையும் சிம்லாவில் மாநாடு நடைபெறுகிறது. மூன்றாவது நாள் நிகழ்வில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக உரை நிகழ்த்த உள்ளார்.

அடுத்த செய்தி