ஆப்நகரம்

​சபாநாயகராக அப்பாவு பதவியேற்பு: இபிஎஸ் வாழ்த்து!

தமிழக சட்டமன்ற சபாநாயகராக அப்பாவு பதவியேற்றுக் கொண்டார்.

Samayam Tamil 12 May 2021, 11:21 am
தமிழக சட்டமன்ற சபாநாயகராக அப்பாவு தேர்ந்தெடுக்கப்பட்டதாக தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி அறிவித்தார்.
Samayam Tamil appavu


சபாநாயகர் தேர்வுக்கு நேற்று 12 மணி விண்ணப்பிக்கலாம் என்று சட்டப்பேரவைச் செயலர் அறிவித்தார். திமுக ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு பெயரை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார், அமைச்சர் துரைமுருகன் வழிமொழிந்தார். வேறு யாரும் விண்ணப்பிக்காததால் அப்பாவு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். கு.பிச்சாண்டி துணை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கொரோனா இழப்பீடு 25 லட்சம் ரூ: முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!
இன்று காலை 10 மணிக்கு அவை கூடியதும் சபாநாயகராக அப்பாவு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தற்காலிக சபாநாயகர் பிச்சாண்டி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அவை முன்னவர் துரைமுருகன் ஆகியோர் அப்பாவுவை அழைத்து சென்று, சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.

அதன்பின் முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் சட்டசபை கட்சி தலைவர்கள், சபாநாயகருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அதன்பின், துணை சபாநாயகராக கு.பிச்சாண்டி தேர்வு செய்யப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

ஸ்டாலினுக்கு எதிராக எடப்பாடி போட்ட குண்டு: இனி சசிகலா வர வாய்ப்புள்ளதா?

“அனைவருக்கும் பொதுவானவராக சபாநாயகர் செயல்பட வேண்டும். பேரவையில் எதிர்கட்சிகளுக்கு மக்கள் பிரச்சினைகளைப் பற்றி பேச அதிக வாய்ப்பு வழங்க வேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார்.

அடுத்த செய்தி