ஆப்நகரம்

நெஞ்சை நெகிழச் செய்யும் ’குரு-சிஷ்யாஸ்’; ஆசிரியர் பகவானுக்கு ஏ.ஆர்.ரஹ்மான், ஹிரித்திக் புகழாரம்!

மாணவர்களின் பாசப் போராட்டத்தில் சிக்கிய ஆசிரியருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Samayam Tamil 22 Jun 2018, 12:19 pm
சென்னை: மாணவர்களின் பாசப் போராட்டத்தில் சிக்கிய ஆசிரியருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil Teacher Bagawan


திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே வெள்ளியகரம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு ஆங்கில ஆசிரியராக உள்ள பகவான் மீது, மாணவர்களுக்கு கொள்ளைப் பிரியம்.

இந்த சூழலில் அவரின் பணியிட மாறுதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவர்கள் நடத்திய பாசப் போராட்டம் நாடு முழுவதும் வைரலாகி உள்ளது. ஆசிரியர் பகவானை சூழ்ந்து கொண்டு, கட்டி அணைத்து அழுது புலம்பும் மாணவர்களின் செயலை காண்போர் கலங்காமல் இருக்க முடியாது.

இதற்கிடையில் ஆசிரியரின் பணியிட மாறுதலை மேலதிகாரிகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். இந்நிலையில் ஆசிரியர் பகவான், மாணவர்கள் இடையிலான பாசப் போராட்டத்தை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது டுவிட்டரில் பாராட்டி பதிவிட்டுள்ளார்.

அதேபோல் பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் தனது டுவிட்டரில், ஆசிரியர் - மாணவர் இடையிலான உறவு, நெஞ்சை நெகிழச் செய்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். இன்னும் ஏராளமான பிரபலங்கள் தங்கள் வாழ்த்துகளை ஆசிரியருக்கு தெரிவித்து வருகின்றனர்.

AR Rahman, Hrithik Roshan tweets about English Teacher Bagawan.

அடுத்த செய்தி