ஆப்நகரம்

முதல்வரை சந்திக்க அனுமதி மறுப்பு: கடுப்பில் அதிமுக எம்எல்ஏ

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வழியனுப்ப வந்த அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 23 Oct 2020, 12:13 am

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று புதுக்கோட்டையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மேலும், பல்வேறு அரசு நலத்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டிவைத்தார். இதைத்தொடர்ந்து புதுக்கோட்டையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சை குறித்து முதல்வர் பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார்.
Samayam Tamil ரத்தினசபாபதி


கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தபின் தமிழக மக்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் எனவும் முதல்வர் அறிவித்தார். இதையடுத்து அவர் சென்னை புறப்படுவதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு வந்தார். அங்கே அவரை வழியனுப்ப சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் வந்தனர்.

அப்போது, முதல்வர் பழனிசாமியை வழியனுப்ப வந்த அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தான் அறந்தாங்கி எம்எல்ஏ என்று கூறியும் அவருக்கு பாதுகாப்பு படையினர் அனுமதி வழங்க மறுத்துவிட்டனர். இதையடுத்து அவர்களுடன் ரத்தினசபாபதி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இலவச கொரோனா தடுப்பூசி - ஏன் இந்த பில்டப்? ஸ்டாலின் காட்டம்!

இந்த சம்பவத்தால் அதிருப்தி அடைந்த ரத்தினசபாபதி செய்தியாளர்களிடம் பேசியபோது, “காலையில் இருந்து முதலமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டேன். மற்ற எம்எல்ஏக்கள் அனைவரையும் அனுமதித்தனர். என்னை மட்டும் அனுமதிக்கவில்லை. எனது சிரிப்பை மட்டும் பதிலாக எடுத்துக்கொள்ளுங்கள். விரைவில் இதுபற்றி பேசுகிறேன்” என்று கூறினார்.

முதலமைச்சரை சந்திக்க வேண்டியவர்கள் பட்டியலில் ரத்தினசபாபதியின் பெயர் இல்லை. இதனால்தான் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால், திருமயம் எம்எல்ஏ வைரமுத்து உள்ளிட்டோருக்கு அனுமதி வழங்கப்பட்டது. ரத்தினசபாபதி அமமுகவில் இருந்து அதிமுகவுக்கு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி