ஆப்நகரம்

சூர்யாவுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் அர்ஜுன் சம்பத்

சூர்யாவை செருப்பால் அடித்தால் ஒரு லட்சம் ரூபாய் தருவதாக அர்ஜுன் சம்பத் பேசியுள்ளது சர்ச்சையைக் கிள்ப்பியுள்ள்து.

Samayam Tamil 19 Sep 2020, 6:26 am
நீட் தேர்வு குறித்து அறிக்கை வெளியிட்ட நடிகர் சூர்யாவுக்கு தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்து. அதேசமயம் பாஜக, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட சில அமைப்புகளால் அவர் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகிறார்.
Samayam Tamil arjun sampath incites violence against surya


சூர்யாவின் அறிக்கையில் நீதிமன்றத்தை அவமதித்ததாக சர்ச்சை கிளப்பிவிடப்பட்டது. நீதிமன்ற அவமதிப்பு புகாரும் எழுந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி இருந்தார்.

ஆனால் அவரது கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் சூர்யாவுக்கு சில அறிவுரைகளை வழங்கியது.

இந்தப் பிரச்சினையை தீவிரமாக முன்னெடுக்கும், பாஜக, இந்து மக்கள் கட்சியினர் தொடர்ந்து சூர்யா குறித்து விமர்சித்து வருகின்றனர்.

சாக்கடை அள்ளிய மாணவருக்கு லேப்டாப் வழங்கிய உதயநிதி ஸ்டாலின்: குவியும் பாராட்டுகள்!

இந்நிலையில் நடிகர் சூர்யாவை யாரேனும் செருப்பால் அடித்தால் அவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் தருவதாக இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் பேசியுள்ளார். சர்ச்சைக்குரிய வகையில், வன்முறையைத் தூண்டும் விதமாக தொடர்ந்து பேசும் அர்ஜுன் சம்பத் இந்தமுறையும் அவ்வாறு பேசியுள்ளதாக சமூக வலைதளங்களில் விவாதிக்கப்படுகிறது.

அகரம் மூலம் எண்ணற்ற ஏழைக் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்று வரும் சூர்யா தொடர்ந்து மாணவர்களின் நலன் குறித்து பேசிவருகிறார். ஆனால் பாஜக முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மாணவர்களின் நலன் குறித்துப்பேச சூர்யாவுக்கு என்ன தகுதி உள்ளது என கேட்டுள்ளார்.

மோடி பிறந்தநாள், பலூன் வெடித்து பாஜகவினருக்கு தீ காயம்!

அர்ஜுன் சம்பத், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரின் பேச்சு சூர்யா ரசிகர்கள், பொது மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

அடுத்த செய்தி